நாடாளுமன்ற தேர்தல தொடர்பாக பிரபல செய்தி நிறுவனம் உருவாக்கிய கருத்துருவாக்கத்திற்கு அதிமுக கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அதிமுகவின் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் ராஜ் சத்யன் வெளியிட்டுள்ள X தளப்பதிவில் கூறியிருப்பதாவது :- பத்திரிக்கைத் துறையில் ஒரு புதிய மாற்றமாக திரு. பச்சமுத்து அவர்களால் தொடங்கப்பட்ட “புதிய தலைமுறை” நாளிதழ், நாளடைவில் செய்தி தொலைக்காட்சியாகவும் விரிவாக்கம் அடைந்தபோது, மக்களின் குரலாக, நடுநிலையான செய்திகளை, “உண்மை உடனுக்குடன்” என்ற அடிப்படையில் வழங்குவர் என்ற பெரும் நம்பிக்கை இருந்தது.
ஆனால், இன்றைக்கு அவர்கள் அரங்கேற்றியுள்ள போலி கருத்துருவாக்கம், இவர்களும் மோசமான அரசியல் ஊதுகுழல் தான் என்பதை நிரூபித்துள்ளது.
3 சதவீத வாக்குகள் உள்ள பாஜக தங்கள் கூட்டணி கட்சி என்பதால், அதனைக் தூக்கிப் பிடிப்பதற்காக, அதிமுகவின் வாக்குவங்கியை குறைத்துக் காட்ட முனைவது, குறைந்தபட்ச நேர்மையோ, அடிப்படை ஊடக அறமோ அறவும் அற்ற செயல்.
இந்த போலி கருத்துருவாக்கம், வெறும் கூட்டணி தர்மத்திற்காக நிகழ்த்தப்பட்டதா அல்லது அரை நிர்வாண வீடியோ வெளியிடப்படுமென்று யாரேனும் மிரட்டியதால் நிகழ்த்தப்பட்ட ஒன்றா? கல்வி நிறுவனம் வைத்து பல்வேறு பட்டதாரி மாணவர்களை உருவாக்கும் ஒருவர் நிர்வகிக்கும் தொலைக்காட்சி நிகழ்த்தும் இச்செயல், அவருக்கும் அழகல்ல! அவர் கல்லூரிக்கும் அழகல்ல!, என தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.