அதிமுக கோயிலான எம்.ஜி.ஆர் மாளிகையை அடித்து நொறுக்கிய ஒ.பி.எஸ் இனி அதிமுகவில் வருவதற்கு விட மாட்டோம் என்று கரூர் மாவட்ட அதிமுக நிர்வாகி தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்ட தீர்ப்பு செல்லாது என்றும், ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதன்மூலம், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்தது செல்லாததாகி விட்டது.
இதனையடுத்து, ஆங்காங்கே உள்ள அதிமுகவினர் தங்களது நிலைப்பாட்டினை எடுத்துரைத்து வருகின்றனர்.
இந்நிலையில், கரூர் மாவட்ட அளவில் எடப்பாடி பழனிச்சாமி கோட்டையாக விளங்கும் நிலையில், மாவட்ட அளவில் அதிமுக தொண்டரும், அதிமுக நிர்வாகியுமான கே.என்.ஆர்.சிவராஜ் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், அதிமுக கோயிலான எம்.ஜி.ஆர் மாளிகையை அடித்து நொறுக்கிய ஒ.பி.எஸ் இனி அதிமுகவில் வருவதற்கு கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை விடமாட்டோம் என்றும், இந்த திமுக ஆட்சி சிறப்பான ஆட்சி என்று சர்ட்டிபிகேட், கொடுக்கும் ஒ.பி.எஸ் மகன், ஒ.பி.எஸ் எந்த ஒரு பொதுக்குழுவிற்கும் வரவில்லை. எடப்பாடி பழனிச்சாமி 98 விழுக்காடு ஆதரவாளர்களை கொண்டு அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக உள்ளார். ஆகவே இந்த தீர்ப்பு உண்மையான அதிமுக தொண்டர்களை பொறுத்தவரை இது முரணான தீர்ப்பு, என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
முன்னணி நடிகர் மலையாள சினிமா உலகில் முன்னணி நடிராக வலம் வருபவர் விநாயகன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “ஜெயிலர்”…
அறக்கட்டளைக்கு பத்து கோடி நடிகர் சூர்யா 2006 ஆம் ஆண்டு ஏழை குழந்தைகளின் கல்விக்காக அகரம் அறக்கட்டளை என்ற ஒன்றை…
கரூரில் வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டவர்களுக்கு போலியாக பான்கார்டு மற்றும் ஆதார் கார்டுகளை போலி ஆவணங்கள் மூலம் தயாரித்து…
ரஜினியின் பக்தர்கள் தனக்கு பிடித்த நடிகரை கடவுளை போல் பார்க்கும் வழக்கம் தமிழர்களிடம் உண்டு. அதில் முதல் இடத்தில் இருப்பவர்…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஜீனூர் பகுதியை சேர்ந்தவர் மாணவன் கீர்த்தி வர்மா. இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில்…
காமெடி நடிகர் டூ ஹீரோ தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக வலம் வந்த சூரி “விடுதலை” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக…
This website uses cookies.