மக்களை திசைதிருப்பும் நாடகம்… தாழ்த்தப்பட்ட மக்களுக்கு துரோகம் இழைத்த திமுக ; இபிஎஸ் கடும் குற்றச்சாட்டு..!!

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு துரோகம் மற்றும் அநீதி இழைத்தவர்கள் திமுகவினர் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :- கோவை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் அம்மன் அர்ச்சுணன் மகன் கோபாலகிருஷ்ணன் உடல்நலக் குறைவால் இறந்து விட்டார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பதினருக்கு ஆறுதல் சொல்ல வந்துள்ளேன்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது. எங்கு பார்த்தாலும் விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு, இப்படி மக்களை வாட்டி வதைக்கும் சூழலில் மக்களை திசைதிருப்புவதற்காக சனாதன தர்மம் எனக் கூறி நாடகத்தை அரங்கேற்றி வருகிறார் உதயநிதி ஸ்டாலின். சனாதனம் பேசும் திமுக கடந்த காலத்தில் ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் போட்டியிட்டபோது, அவருக்கு எதிர்த்து ஓட்டு போட்டவர்கள் தான் திமுக. அவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்ற நிலையில் எதிர்த்து வாக்களித்தவர்கள் திராவிட முன்னேற்ற கழகத்தைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

தற்போதைய ஜனாதிபதி திரௌபதி முர்மு போட்டியிட்ட போதும் எதிர்த்து ஓட்டு போட்டார்கள். இவரும் மலைவாழ் இனத்தைச் சார்ந்தவர். இவரையும் ஆதரிக்கவில்லை, எதிர்த்து வாக்களித்தனர். இப்படி சனாதன தர்மத்தை பேசுகிறவர்கள், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த உயர்ந்த பதவியில் போட்டியிட்டவர்களை எதிர்த்து வாக்களித்தவர்கள்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய பொறுப்பில் உள்ள ஆர்எஸ் பாரதி, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி இருக்கும்பொழுது, கருணாநிதி நீதி அரசர்கள் நியமித்தது குறித்து சில பதில்களை சொன்னார். அப்போது, நீதிபதி பதவி என்பது நாங்கள் போட்ட பிச்சை என கொச்சையாக பேசினார். தனபால் அவர்கள் சட்டப்பேரவை தலைவராக நியமிக்கப்பட்டபோது, அவரை இழிவுபடுத்தியவர்கள் தான் இன்றைய திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள்.

சட்டப்பேரவை தலைவராக தனபால் இருந்த பொழுது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து அவரை அந்த ஆசனத்தில் இருந்து கீழே இறக்கி, எங்களோடு அமர வைத்து சட்டமன்ற விவாதத்தில் அவர் மீது பல்வேறு விமனம் செய்தது தான் இந்த திராவிட முன்னேற்றக் கழக அரசு. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு துரோகம் மற்றும் அநீதி இழைத்தவர்கள் தான் இந்த திமுகவினர்.

அதிமுக மதத்திற்கும், சாதிக்கும் அப்பாற்பட்ட கட்சி. உதயநிதி ஸ்டாலின் சனாதன ஒழிப்பு என்று சொல்லி அதனை பேசுபொருளாக்கி வருகிறார். அவர் செய்த துரோக செயல்களால் தமிழகம் குட்டிச்சுவர் ஆகி இருக்கிறது. எல்லா துறைகளும் ஊழல் மலிந்துள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. நேற்றைய தினம் திருப்பூர் மாவட்டத்தில் நான்கு பேர் துடிக்க துடிக்க வெட்டி கொலை செய்துள்ளனர். நேற்று மட்டும் தமிழகத்தில் ஒன்பது கொலைகள் நடந்துள்ளது. கொலை நடக்காத இடம் இல்லை.

மக்களை திசைதிருப்ப திமுக இந்த நாடகத்தை அரங்கேற்றி உள்ளது. பல்லடம் கொலை குற்ற சம்பவத்தில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.யார் குற்றவாளிகள் என கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதிமுக குறித்து விமர்சிக்க உதயநிதி ஸ்டாலினுக்கு வயது போதவில்லை. அவர் என்ன சாதனை செய்துவிட்டார். திமுக அமைச்சராக பதவி கொடுத்துள்ளனர் அவ்வளவுதான்.

கருணாநிதிக்கு பேரன், ஸ்டாலினுக்கு மகன் அது மட்டும் தான் அவருக்கு உள்ள தகுதி. அதை வைத்துக்கொண்டு அனைத்தையும் ஆட்டிப்படைக்க முயற்சிக்கிறார். அது ஒருபோதும் நடக்காது. உதயநிதிக்கு பிறகு இன்ப நிதி என்கிறார்கள். இது முற்றிலும் வாரிசு அரசியல் கட்சி. திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி. கட்சி அல்ல. ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அதிமுக ஆதரவு என்பதை ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்.

இந்தியாவிற்கே சூப்பர் முதலமைச்சர் மற்றும் முதன்மையான முதலமைச்சர் என கூறும் தமிழக முதலமைச்சர் தேர்தலை சந்திக்க ஏன் அச்சப்படுகிறார். நல்லாட்சி நடத்துகிறேன் என்பவர் மக்களை சந்திக்க ஏன் பயப்படுகிறீர்கள்? ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டது. தமிழகத்தில் முதலமைச்சர் என்ன செய்துவிட்டார்? இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலம் என்ற சாதனையை செய்திருக்கிறார் சூப்பர் முதலமைச்சர்.

இரண்டரை ஆண்டுகளில் இரண்டு லட்சத்து 75 ஆயிரம் கோடி கடன் வாங்கி தமிழகத்தை கடனாளியாக்கி இருக்கிறார். மதுபானம், பத்திரப்பதிவு, ஜிஎஸ்டி, சாலை வரி ஆகியவற்றில் வருமானம் அதிகரித்துள்ளது. கடனும் அதிகரித்துள்ளது. ஆனால் திட்டங்கள் எதுவும் செய்யவில்லை. அப்படி இருக்கும்போது மோசமான, திறமை இல்லாத, பொம்மை முதலமைச்சர் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்.

திறமையற்ற முதலமைச்சர் ஆட்சி செய்கின்ற காரணத்தால் திறமையான நிதி நிலையை கையாளாத காரணத்தால், நிறைய திட்டங்கள் கிடப்பில் உள்ள காட்சிகளை காண்கிறோம். கொடநாடு வழக்கில் தன்மீதான குற்றச்சாட்டுகள் என்பது சிந்துபாத் கதை போன்று தொடர்ந்து வருகிறது, என்றார்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனின் தந்தையான அல்லு அரவிந்த் தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழில்…

1 day ago

செல்ஃபோனை 3 நாட்கள் ஸ்விட்ச் ஆஃப் செய்த சமந்தா? அவருக்குள்ள இப்படி ஒரு யோசனையா?

டாப் நடிகை தென்னிந்தியாவின் டாப் நடிகையாக சமீப காலங்களில் வலம் வருபவர் சமந்தா. கடந்த 2022 ஆம் ஆண்டு தனக்கு…

1 day ago

கஞ்சா வாங்க ஒடிசா போன தமிழக இளைஞர்? தாய்க்கு வந்த போன் கால் : ஷாக் சம்பவம்!

திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஹரி ஜோதி என்பவரின் இரண்டாவது மகன் அஜய்(22). இவர் நண்பர்களுடன்…

1 day ago

ரேஸ் காருக்குள் குழந்தையை வைத்து விளையாட்டு காட்டிய AK? இணையத்தில் வெளியான கியூட் வீடியோ!

ரேஸர் அஜித்குமார் அஜித்குமார் தற்போது உலக நாடுகள் பலவற்றில் கார் பந்தயங்களில் மிகவும் தீவிரமாக ஈடுபாடு காட்டி வருகிறார். சில…

1 day ago

முதல் நாளிலேயே குப்புற கவிழ்ந்த ஃபீனிக்ஸ்? வீழான்னு சொல்லிட்டு இப்படி விழுந்து கிடக்குறீங்களே!

பீனிக்ஸ் விழான்? விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் “பீனிக்ஸ்”. இத்திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள…

1 day ago

அஜித் கொலைக்கு பின் தனிப்படையை கலைத்துள்ளார் CM.. ஆனால் நிகிதா : கூட்டணி கட்சி பிரமுகர் பரபரப்பு!

அஜித் குமார் கொலைக்கு பிறகு தனிப்படையை அரசு கலைத்திருப்பது வரவேற்கத்தக்கது.மடப்புரத்தில் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இதையும் படியுங்க: திமுக…

1 day ago

This website uses cookies.