தொண்டர்களை குடும்பமாக பார்ப்பதாகக் கூறும் ஸ்டாலின், தொண்டர் ஒருவரை முதலமைச்சராக ஆக்குவாரா..? என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் அதிமுக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார்.
அப்போது, அவர் பேசியதாவது :- பாஜகவுடன் கள்ளத்தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை. எங்கள் நிர்வாகிகள் விரும்பினால் யாருடனும் கூட்டணி வைப்போம், இல்லை விலகுவோம். தொண்டர்களை குடும்பமாக பார்ப்பதாகக் கூறும் ஸ்டாலின், தொண்டர் ஒருவரை முதலமைச்சராக ஆக்குவாரா..? ஸ்டாலின் குடும்பத்தினரைத் தவிர திமுகவில் வேறு ஆளே இல்லையா..?.
கெங்கவல்லியில் கரும்புக் காட்டின் நடுவே கான்கிரீட் பாதை போட்டு நடந்து சென்றவர் ஸ்டாலின். பேன்ட், ஷு போட்டுக் கொண்டு ஏர் ஓட்ட வந்த ஸ்டாலினுக்கு விவசாயிகள் பற்றி என்ன தெரியும்..? விவசாயிகளைப் பற்றி எதுவும் தெரியாமல் தெரிந்தது போல நாடகமாடுகிறார் ஸ்டாலின், இன்றளவுக்கும் விவசாயப் பணிகளில் ஈடுபட்டு, விவசாயிகளின் கஷ்டங்களை அறிந்திருப்பவன் நான், ஏழை மக்கள் பாதிக்கப்படும் போது ஓடோடி வந்து உதவி செய்து வரும் கட்சி அதிமுக, எனக் கூறினார்.
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நாடு…
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் மே தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு…
16 வயது சிறுவனுடன் 12 முறை உடலுறவு வைத்த டீச்சர் மீது 64 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம்…
This website uses cookies.