வேங்கைவயல் சம்பவத்தை போல் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது உள்துறையை வைத்திருக்கும் ஸ்டாலின் தகுதி அற்றவர் என்பதை நிரூபிக்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக பிரமுகர் இல்ல திருமணம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சோமசுந்தரம், கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் மணமக்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது :- தமிழகம் போதை பொருளின் ஹப்பாக (HUB) விளங்குகிறது.
மேலும் படிக்க: அடிக்கடி ஆடியோ வெளியிடும் அதிபுத்திசாலி IPS… இந்த சாதாரண சின்ன விஷயம் கூட தெரியாதா..? செல்லூர் ராஜு பாய்ச்சல்!
வேங்கை வயல் சம்பவம் நடைபெற்று பல மாதங்கள் ஆகியும் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததும், விஞ்ஞான வளர்ச்சி உள்ள நிலையில், இது போன்ற சம்பவங்களை ஆரம்பத்திலேயே ஒடுக்கி இருக்க வேண்டும். உள்துறை அமைச்சர் பதவியை வைத்துள்ள ஸ்டாலின் இதனை கண்டு கொள்ளாததும், இதன் தொடர்ச்சியை பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
எனவே முதல்வர் உள்துறை அமைச்சர் பதவி வைத்திருப்பதற்கு லாய்க்கற்றவர் என்பது அனைவருக்கும் தெரியவந்துள்ளது, எனக் கூறினார். இந்த நிகழ்வின் போது அதிமுக நிர்வாகிகள் மற்றும் திருமண வீட்டார் என பல உடனிருந்தனர்
அனிருத்-காவ்யா மாறன் காதல்? தமிழ் சினிமாவின் டாப் இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். தற்போது விஜய்யின் “ஜனநாயகன்”, ரஜினியின் “கூலி”,…
வெளியான டிரெயிலர் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தை…
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
This website uses cookies.