நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுகவை சார்ந்த 18 முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் ஒரு திமுக மாஜி எம்பியை பாஜக தனது கட்சிக்கு இழுத்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தற்போது திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. தொகுதி பங்கீட்டில் ஒருவேளை உடன்பாடு ஏற்படாவிட்டால், கூட்டணி மாற்றம் ஏற்படும் நிலையும் உள்ளது.
அதேவேளையில், கடந்த 5 ஆண்டுகளாக பாஜக கூட்டணியில் இருந்து வந்த அதிமுக வெளியேறிய நிலையில், இரு கட்சிகளும் தனித்தனியே கூட்டணியை அமைக்க தீவிரம் காட்டி வருகின்றன. குறிப்பாக, பாமக, தேமுதிகவிடம் தனித்தனியே ரகசிய பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன. பாஜகவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், பாமக 12 தொகுதிகளையும், தேமுதிக 6 தொகுதிகளையும், ஒரு ராஜ்யசபா சீட்டையும் கேட்டுள்ளது. இது பாஜகவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். அங்கு தமிழக கூட்டணி தொடர்பாகவும், பிரதமர் மோடி வருகிற 25 ஆம் தேதி தமிழகம் வருவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது.
இதனிடையே, அதிமுகவிற்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, அக்கட்சியின் முன்னாள் எம்எல்ஏக்கள் இன்று பாஜகவில் இணைய உள்ளனர். டெல்லியில் இன்று காலை நடக்கும் நிகழ்ச்சியில் அதிமுகவை சார்ந்த 18 முன்னாள் எம்எல்ஏக்கள், திமுகவை சார்ந்த ஒரு மாஜி எம்பியும் இன்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் இணையவுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் அண்ணாமலை இன்று மாலையே சென்னை திரும்பவுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாஜி எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைவது அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.