திமுக எனும் கார்ப்பரேட் கம்பெனிக்கு மூடுவிழா… ஒப்புக் கொண்ட சேகர்பாபு : ஜெயக்குமார் கிண்டல்…!!

சென்னை : திமுக என்னும் கார்ப்பரேட் கம்பெனிக்கு 2 ஆண்டுகளில் மூடுவிழா நடைபெறும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த அதிமுக ஆட்சியில் நிகழ்ந்த தவறுகளை சுட்டிக்காட்டி திமுக பிரச்சாரம் செய்து வருகிறது. அதேவேளையில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று அதிமுகவும் பதிலடி கொடுத்து வருகிறது. குறிப்பாக, வாக்குசேகரிக்கச் செல்லும் இடங்களில் திமுக தலைவர்களிடம், மகளிருக்கான ரூ.1,000 எப்போ கொடுப்பீங்க..? என பொதுமக்களே கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டனர்.

இது ஆளும் திமுகவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக எதிர்கட்சிகளும் விமர்சிக்க தொடங்கியதால், விரைவில் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை கொண்டுவர வேண்டிய நெருக்கடி தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில், செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார்.

அவர் பேசியதாவது :- ஸ்டாலின் அவர்களை பொறுத்தவரையில் சினிமாவில் நடிகராக இருந்து வந்தவர்தான். அதனால் எதையும் மனப்பாடம் செய்து ஒப்புவிப்பவராக அவர் இருந்து வருகிறார். அவர் நடித்த சில படங்கள் ஓடவில்லை என்பது வேறு விஷயம். ஆனால் அதில் வரும் கதை வசனங்களை முழுமையாக மனப்பாடம் செய்து அதை ஒப்புவிப்பதில் வல்லவர். முழுமையாக மனப்பாடம் செய்து அதை சரியாக ஒப்புவிப்பவராகவே உள்ளார். யாரோ எழுதிக் கொடுத்ததை தான் வீடியோ கான்பரன்சில் படிக்கிறார். இது ஒருபுறம் இருந்தாலும், டுவிட்டரில் ஒரு தகவல் வந்தால் அதற்கு ஏதேதோ பதில் போடுகிறார். மேற்குவங்க ஆளுநரை பொருத்தவரையில் அம்மாநில சட்டமன்ற கூட்டத்தொடரை ஒத்தி வைத்திருக்கிறார். ஆனால் அவர் முடக்கி விட்டதாக ஸ்டாலின் எதிர்வினையாற்றுகிறார்.

அவருக்கு கீழே உள்ள அதிகாரிகள் இதை எடுத்து சொல்லியிருக்க வேண்டாமா? எந்த அளவிற்கு தமிழ்நாட்டு முதல்வர் சிந்திக்க தெரியாதவராக இருக்கிறார் என்பது இதன் மூலம் தெரிகிறது. நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள முடியாத ஒரு முதலமைச்சரை நாம் பெற்றிருப்பது கவலையடையளிக்கிறது. எது எப்படியோ இந்த ஆட்சியை பொருத்தவரையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கூறியதுபோல கண்டிப்பாக வீட்டுக்கு போக வேண்டிய ஆட்சிதான். சட்டமன்ற தேர்தல்,பாராளுமன்ற பொதுத்தேர்தலுடன் சேர்ந்து வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏனென்றால் நாட்டில் அது போன்ற அறிகுறிகள் தென்படுகிறது. வன்முறை கலாச்சாரம், தீவிரவாதம் தொடர்கிறது. இவற்றையெல்லாம் மத்திய அரசு கண்காணித்து வருகிறது. எனவே நாட்டு மக்களுக்கு பொதுவான ஒரு அமைதி தேவைப்படுகிறது. நிச்சயமாக இரண்டு ஆண்டுகளுடன் திமுக என்ற கார்ப்பரேட் கம்பெனிக்கு மூடுவிழா செய்யப்படும்.

அதை ஒப்புக் கொள்ளும் வகையில்தான் அமைச்சர் சேகர் பாபுவின் பதில்களும் உள்ளது. திமுகவின் ஆட்சியைக் கவிழ்த்தாலும் பரவாயில்லை, ஆனால் கலைத்தாலும் மீண்டும் நாங்கள் தான் ஆட்சிக்கு வருவோம் என கூறுகிறார். அப்படி என்றால் அவர் திமுக ஆட்சியை கலைப்பது நல்லது என ஒப்புக்கொள்கிறார். அமைச்சராக இருப்பவர் ஆட்சியையெல்லாம் கலைக்க முடியாது, எது வேண்டுமானாலும் பேசலாமா என்றல்லவா கேட்டிருக்க வேண்டும், ஆனால் குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறது அதனால்தான் அவர் ஆட்சியை கலைத்தாலும் பரவாயில்லை என்று பேசுகிறார். மீண்டும் திமுக வரப்போவதில்லை, ஒருமுறை தமிழக மக்கள் ஏமாந்து விட்டார்கள், இனியும் திமுகவிடம் ஏமாற மாட்டார்கள். கடந்த 8 மாதங்களாக திமுக என்ன விதைத்ததோ அதுதான் விலையும். கடந்த 8 மாதமாக வன்முறை விதைக்கப்பட்டிருக்கிறது. தீவிரவாதம் தலை தூக்கியிருக்கிறது. நிச்சயம் அதை திமுக அறுவடை செய்யும், எனவே வீட்டுக்கு போகும் நாள் விரைவில் வரும், எனக் கூறினார்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

1 day ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

1 day ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

1 day ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

1 day ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

1 day ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

1 day ago

This website uses cookies.