சென்னை : அதிமுக பொதுக்குழு இன்று கூட உள்ள நிலையில், புதிய தீர்மானங்களை நிறைவேற்ற சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த கோரிக்கை தீவிரமடைந்துள்ளது. இன்று அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு நடைபெற உள்ள நிலையில், நாளுக்கு நாள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு பெருகி வருகிறது.
இதனிடையே, பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது, இருதரப்பினரிடையே காரசார வாதம் நடந்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 23 தீர்மானங்களை தவிர மற்ற புதிய தீர்மானங்கள் குறித்து எந்தவித முடிவும் பொதுக்குழுவில் எடுக்கக் கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன்மூலம், தீர்மான குழு முடிவு செய்த அறிக்கையில் இடம்பெறாத, ஒற்றை தலைமை குறித்து முடிவு எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பெருவாரியான உறுப்பினர்களின் ஆதரவைக் கொண்ட எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை ஓபிஎஸ் கொண்டாடி வருகின்றனர். அதேவேளையில், இன்று நடக்கும் பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்க உள்ளார். இதற்காக அவர் பொதுக்குழு நடக்கும் வானகரத்திற்கு வருகை புரிந்துள்ளார்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.