தமிழகத்தில் போதை பொருள் விற்பனை குறித்து முதல்வர் இதுவரை மறுத்து பேசாதது ஏன் என்று முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் போதைப் பொருட்களை கட்டுப்படுத்த தவறியதாக கூறி, தமிழக அரசை கண்டித்து விழுப்புரத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சிவி சண்முகம் தலைமையில் விழுப்புரம் ரயில் நிலையம் முதல் புதிய பேருந்து நிலையம் வரை இந்த மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
பின்னர், செய்தியாளர்கள் சந்தித்த சிவி சண்முகம் தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் உள்ளதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளாக நாங்கள் சுட்டிக்காட்டி வருவதாகவும், தமிழக அரசு அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறினார். தமிழகத்தில் போதை பொருள் விற்பனை குறித்து முதல்வர் இதுவரை மறுத்து பேசவில்லை, என குற்றச்சாட்டினார்.
போதை பொருள் கடத்தலில் திமுகவினர் சம்பந்தப்பட்டிருப்பதால் முதல்வர் பேச மறுக்கிறாரா என சந்தேகம் எழுந்துள்ளது என்றும், சிந்தடிக் டிரக்ஸ் உலக நாடுகளில் கிடைக்கக்கூடிய போதைப்பொருட்கள் எல்லாம் தமிழகத்தில் சாதாரணமாக கிடைக்கிறது எனவும், ஏன் இதற்கு முதல்வர் பதில் சொல்ல மறுக்கிறார் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கேள்வி எழுப்பினார்.
இதில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் பங்கேற்று தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.