ஒற்றைத் தலைமை முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த கோரிக்கை தீவிரமடைந்துள்ளது. இன்று அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு நடைபெற உள்ள நிலையில், நாளுக்கு நாள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு பெருகி வருகிறது.
இன்றைய பொதுக்குழுவில் எப்படியாவது ஒற்றைத் தலைமை விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக்கி விட வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் காத்திருந்தனர்.
ஆனால், இன்றைய அதிகாலையில் பொதுக்ழு குறித்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், புதிய தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது என்று உத்தரவிட்டு விட்டது. இதனால், ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்து பொதுக்குழுவில் முடிவெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், பொதுக்குழு நடக்கும் வானகரத்திற்கு அதிமுக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் திரண்டு வந்து கொண்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர் உள்ளிட்ட சிலர் அதிகாலையிலேயே பொதுக்குழு நடக்கும் இடத்திற்கு வந்து, ஏற்பாடுகளை கவனித்து வந்தனர்.
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “தமிழகம் முழுவதும் அதிமுக நிர்வாகிகள் கட்சிக்கு ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமிதான் இருக்க வேண்டும் என்று நேரில் வந்து ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.
ஒற்றைத் தலைமை முடிவில் எந்த மாற்றமுமில்லை. நீதிமன்ற தீர்ப்பால் எங்களுக்கு பின்னடைவு இல்லை. நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பளிக்கிறோம். மேல்முறையீடு செய்வது குறித்து தலைமை முடிவு செய்யும், எனக் கூறினார்.
விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு தற்போது பிரபலமாக உள்ளனர். அந்த வரிசையில் போட்டியாளராக…
தமிழ் சினிமாவில் தனித்த இடத்தை பிடித்தவர் ஓவியா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் இவருக்கு ரசகிர்கள் பலம் அதிகரித்தது.…
கோவை சுந்தராபுரம் அடுத்து உள்ள சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த 80 வயது மூதாட்டி மனோன்மணி வெயிலின் சூட்டை தனிக்கும் விதமாக…
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
This website uses cookies.