ராணிப்பேட்டை ; வருகின்ற நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியை மக்கள் தருவார்கள் என்று அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த காரை நேரு நகர் பகுதியில் உள்ள சையத் சாதிக்க்ஷா அவ்லியா தர்காவில், தமிழக முன்னாள் முதல்வரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், எடப்பாடி பழனிச்சாமி கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளராகவும், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தலைமையிலான ஆட்சி மீண்டும் அமைவதற்கு சிறப்பு பிரார்த்தனை மற்றும் தொழுகை நிகழ்ச்சியானது நடைபெற்றது.
இந்த சிறப்பு பிரார்த்தனை மற்றும் தொழுகை நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வக்பு வாரிய முன்னாள் தலைவரும், கழகத்தின் அவைத்தலைவருமான தமிழ் மகன் உசேன் கலந்துகொண்டு கட்சியின் நிர்வாகிகளுடன் தர்காவில் சிறப்பு பிரார்த்தனையை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்கள் பேட்டி அளித்த தமிழ் மகன் உசேன் பேசியதாவது :- தமிழகத்தில் நிச்சயமாக இந்த விடியா திமுக அரசை விரைவில் வீட்டிற்கு அனுப்புவது நிச்சயம். விரைவில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் வரும் வேளையில், சட்டமன்றத் தேர்தலில் மக்கள் விடிய அரசின் மீது ஏற்பட்ட பகை உணர்வு அறியாமல் வாக்குகளை செலுத்தி விட்டோமே என்று குழம்பி கொண்டிருக்கும் வேளையில், மக்கள் கூடிய விரைவில் வீடிய திமுக அரசை வீட்டிற்கு அனுப்புவதே நிச்சயம், என்று தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் எம்,ஜி,ஆர் ஆட்சி ஜெயலலிதா ஆட்சி போல, தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியை மக்கள் வருகின்ற சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயமாக வாக்குகளை தருவார்கள், என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் துணை கொறடாவுமான சு.ரவி உள்பட 500-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.