ராணிப்பேட்டை ; வருகின்ற நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியை மக்கள் தருவார்கள் என்று அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த காரை நேரு நகர் பகுதியில் உள்ள சையத் சாதிக்க்ஷா அவ்லியா தர்காவில், தமிழக முன்னாள் முதல்வரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், எடப்பாடி பழனிச்சாமி கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளராகவும், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தலைமையிலான ஆட்சி மீண்டும் அமைவதற்கு சிறப்பு பிரார்த்தனை மற்றும் தொழுகை நிகழ்ச்சியானது நடைபெற்றது.
இந்த சிறப்பு பிரார்த்தனை மற்றும் தொழுகை நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வக்பு வாரிய முன்னாள் தலைவரும், கழகத்தின் அவைத்தலைவருமான தமிழ் மகன் உசேன் கலந்துகொண்டு கட்சியின் நிர்வாகிகளுடன் தர்காவில் சிறப்பு பிரார்த்தனையை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்கள் பேட்டி அளித்த தமிழ் மகன் உசேன் பேசியதாவது :- தமிழகத்தில் நிச்சயமாக இந்த விடியா திமுக அரசை விரைவில் வீட்டிற்கு அனுப்புவது நிச்சயம். விரைவில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் வரும் வேளையில், சட்டமன்றத் தேர்தலில் மக்கள் விடிய அரசின் மீது ஏற்பட்ட பகை உணர்வு அறியாமல் வாக்குகளை செலுத்தி விட்டோமே என்று குழம்பி கொண்டிருக்கும் வேளையில், மக்கள் கூடிய விரைவில் வீடிய திமுக அரசை வீட்டிற்கு அனுப்புவதே நிச்சயம், என்று தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் எம்,ஜி,ஆர் ஆட்சி ஜெயலலிதா ஆட்சி போல, தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியை மக்கள் வருகின்ற சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயமாக வாக்குகளை தருவார்கள், என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் துணை கொறடாவுமான சு.ரவி உள்பட 500-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
Upcoming Hero சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது கெரியரை தொடங்கியவர்தான் ரியோ. அந்த சமயத்திலேயே மிகப் பிரபலமான தொகுப்பாளராகவும்…
This website uses cookies.