சென்னை : தமிழகத்தில் சூரிய கிரகணம் தென்படும் நிலையில், அதனை வெறும் கண்களில் பார்க்கக் கூடாது என்று விஞ்ஞானிகள் அறிவுறுத்தினர்.
சூரிய கிரகணம் என்பது சூரியனுக்கும், பூமிக்கும் இடையே நிலவு வரும் போது சூரியனை நிலவு மறைக்கும் நிகழ்வாகும். அமாவாசை நாளில் தான் இந்த சூரிய கிரகணம் நிகழும். மழை இல்லாமல் இருந்தால் கிரகணத்தை தெளிவாக பார்க்கலாம். முழு சூரிய கிரகணம், வளைய சூரிய கிரகணம், பகுதி சூரிய கிரகணம் என்று மூன்று விதமான சூரிய கிரகணம் நடக்கிறது.
இன்றைய தினம் பகுதி நேர சூரிய கிரகணம் நிகழ்கிறது. சந்திரன் சூரியனுடைய ஒரு பகுதி மட்டும் மறைக்கும் போது ஏற்படுவது பகுதி நேர சூரியகிரகணம் ஆகும்.
வானத்தில் நிகழும் அதிசய நிகழ்வான சூரிய கிரகணம் இன்று மாலை நிகழ உள்ளது. இந்தியாவில் இந்த சூரிய கிரகணம் மாலை 4.29 மணிக்கு தென்படும். இந்தியாவில் 1 மணி நேரம் 45 நிமிடங்கள் இந்த சூரிய கிரகணம் தென்படும். சூரிய கிரகணம் மாலை 4 மணி 29 நிமிடங்களுக்குத் தொடங்கி இதனுடைய உச்சகட்ட மறைப்பு நிலை மாலை 5 மணி 30 நிமிடங்களுக்கும், சூரியன் மறையும்போது 5 மணி 48 நிமிடமுமாகும்.
அதிகபட்சமாக குஜராத் மாநில துவாரகாவில் சூரிய கிரகணம் நீண்ட நேரம் நீடிக்கும். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, ஊட்டி மற்றும் ஹைதராபாத், விசாகப்பட்டினம், பாட்னா, பெங்களூரு, திருவனந்தபுரம், மங்களூரு, கான்பூர், லக்னோ, நாக்பூர், வாரணாசி ஆகிய நகரங்களில் ஒரு மணி நேரத்துக்கும் குறைவாக சூரிய கிரகணம் தெரியும்.
சூரிய கிரகணத்தை பார்க்க மக்கள் ஆர்வமாக உள்ளனர். கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது என்றும், கிரகணத்தின்போது சூரியனை வெறும் கண்களால் எளிதாக பார்க்க முடியும் என்பதால், அவ்வாறு 50 முதல் 90 விநாடிகள் பார்க்கும்போது, நமக்கு தெரியாமல் சூரியனின் கதிர்கள் கண்களின் விழித்திரையின் மத்திய பகுதியை பாதிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
அதேபோல, கிரகண சமயத்தில் கர்ப்பிணிகள் வெளியில் செல்லக்கூடாது என்றும், கிரகண நேரத்தில் உணவு சாப்பிடக்கூடாது என்றும் கடினமான கனமான பொருட்களை தூக்கக் கூடாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…
தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…
ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…
கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…
நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…
This website uses cookies.