தமிழகம் வருகிறார் அமித்ஷா… ரோடுஷோ நடத்த ஏற்பாடு : தேதியுடன் தொகுதியும் அறிவிப்பு!
தமிழகத்தில் ஏப்.,19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து, பிரசாரம் சூடு பிடித்துள்ளது. தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து முக்கிய தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், நேற்றும், இன்றும் பிரதமர் மோடி சென்னை, வேலூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார். இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை மறுநாள் தமிழகம் வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை விமான நிலையத்திற்கு ஏப்.,12ம் தேதி மாலை 3:05 மணிக்கு வரும் அமித்ஷா, அங்கிருந்து சிவகங்கைக்கு ஹெலிகாப்டர் மூலமாக செல்கிறார்.
பா.ஜ.க, வேட்பாளர் தேவநாதன் யாதவை ஆதரித்து அங்கு மாலை 3:50 மணிக்கு 2 கி.மீ தூரம் ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
பின்னர் 5 மணிக்கு கோட்டை பைரவர் கோயில், ராஜராஜேஸ்வரி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, மீண்டும் ஹெலிகாப்டரில் மதுரை திரும்புகிறார்.
மதுரையில் பா.ஜ.க வேட்பாளர் ராம சீனிவாசனை ஆதரித்து 2 கி.மீ தூரம் ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இரவு 7:30 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்கிறார்.
பின்னர் மதுரை கோர்ட்யார்டு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்து, 13ம் தேதி காலை 8:30 மணிக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரம் கிளம்பி செல்கிறார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.