தமிழரை பிரதமராக்க வேண்டும் என அமித்ஷா பேசியது மக்களை ஏமாற்றும் செயல் என திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரும் மூத்த பாஜக தலைவருமான அமித்ஷா இருநாள் பயணமாக தமிழ்நாட்டுக்கு வருகை தந்துள்ளார். இன்று வேலூர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அவர், ‘தமிழரை பிரதமராக்க வேண்டும்’ என்று பேசியிருந்தார். அவருடைய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், அமித்ஷாவின் பேச்சு குறித்து தி.மு.க செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், தென் சென்னையில் பாஜக மூத்த தலைவர்களே தோல்வியடைந்ததாக குறிப்பிட்டார்.
தமிழர்கள் பாஜகவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதுவரை ஏற்கவில்லை; இனிமேலும் ஏற்க மாட்டார்கள். தமிழர்களுக்கு விரோதமான கட்சியாக பார்க்கிறார்கள் என திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் விமர்சனம் செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் மட்டுமே தமிழைப் பற்றி அமித்ஷா பேசுவார். வடநாட்டிற்குச் சென்றால் இந்திதான் என பேசுவார். தமிழரை பிரதமராக்க வேண்டும் என்ற அமித்ஷாவின் கருத்து மக்களை ஏமாற்றும் வகையில் உள்ளது என்று தெரிவித்தார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.