தமிழரை பிரதமராக்க வேண்டும் என அமித்ஷா பேசியது மக்களை ஏமாற்றும் செயல் என திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரும் மூத்த பாஜக தலைவருமான அமித்ஷா இருநாள் பயணமாக தமிழ்நாட்டுக்கு வருகை தந்துள்ளார். இன்று வேலூர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அவர், ‘தமிழரை பிரதமராக்க வேண்டும்’ என்று பேசியிருந்தார். அவருடைய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், அமித்ஷாவின் பேச்சு குறித்து தி.மு.க செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், தென் சென்னையில் பாஜக மூத்த தலைவர்களே தோல்வியடைந்ததாக குறிப்பிட்டார்.
தமிழர்கள் பாஜகவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதுவரை ஏற்கவில்லை; இனிமேலும் ஏற்க மாட்டார்கள். தமிழர்களுக்கு விரோதமான கட்சியாக பார்க்கிறார்கள் என திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் விமர்சனம் செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் மட்டுமே தமிழைப் பற்றி அமித்ஷா பேசுவார். வடநாட்டிற்குச் சென்றால் இந்திதான் என பேசுவார். தமிழரை பிரதமராக்க வேண்டும் என்ற அமித்ஷாவின் கருத்து மக்களை ஏமாற்றும் வகையில் உள்ளது என்று தெரிவித்தார்.
மாறன் குடும்பத்தில் ஏற்பட்ட புகைச்சல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சன் டிவி பங்கு தொடர்பாக கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன்…
வெளியானது குபேரா தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தில் தனுஷுடன் நாகர்ஜுனா,…
சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா…
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
This website uses cookies.