தமிழக அரசியலில் களம் இறங்கியுள்ள விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இந்த கட்சியின் கொடி மற்றும் பாடலையும் வெளியிட்டு அசத்தினார்.
இதனையடுத்து தனது முதல் அரசியல் மாநாடு தொடர்பாகவும் அறிவித்தார். அதன் படி தமிழகத்தில் பல மாவட்டங்களில் இடம் தேர்வு செய்யப்பட்ட நிலையில் கடைசியாக விக்கிரவாண்டியில் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டது.
செப்டம்பர் 23ஆம் தேதி மாநாடு தொடர்பான அறிவிப்பும் வெளியானது. இதனையடுத்து மாநாடு நடத்த போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டது.
மாநாடு நடைபெறும் இடத்தை பார்வையிட்ட போலீசார் 21 கேள்விகளை கேட்டிருந்தனர். இதனை தொடர்ந்து 21 கேள்விகளுக்கும் பதில் அளித்த நிலையில், 33 நிபந்தனைகளோடு மாநாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் திட்டமிட்டப்படி மாநாடு நடைபெறுவதற்கு எந்தவித பணிகளும் தொடங்கவில்லை.
புற்கள் கூட வெட்டாத காரணத்தால் மாநாடு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. இதனையடுத்து மாநாடு அக்டோபர் மாதம் தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
எனவே புதிய தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என தவெக நிர்வாகிகள் காத்திருந்தனர்.
இந்தநிலையில் மாநாடு தேதி தொடர்பாக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்திய நாள் முதல், நம் கழகத் தோழர்களின் எண்ணங்களுக்கு ஏற்பவும் தமிழ்நாட்டு மக்களின் பேரன்புடனும் பேராதரவுடனும் நமது அரசியல் வெற்றிக்கான களம் விரிவடைந்துகொண்டே வருகிறது.
கழகக் கொடியேற்று விழாவின்போது. நமது முதல் மாநில மாநாட்டுத் தேதியை அறிவிப்பதாகக் கூறியிருந்தோம். நமது மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், தமிழக அரசியல் களத்தில் புதிய நம்பிக்கையை விதைக்கக்கூடிய நமது கழகத்தின் கொள்கைத் தலைவர்கள், கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல் திட்டங்களைப் பிரகடனப்படுத்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, வருகின்ற அக்டோபர் மாதம் 27ஆம் தேதி (27.10.2024), மாலை 4 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது என்பதைப் பெருமகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் படிக்க: அப்பு பிரியாணி கடையை தொடர்ந்து SS ஹைதராபாத் பிரியாணி கடைக்கும் ஆப்பு.. சீல் வைத்த அதிகாரிகள்!
நமது வெற்றிக் கொள்கை மாநாடு, நம்மை வழிநடத்தப் போகும் கொள்கைகளையும் நாம் அடையப் போகும் இலக்குகளையும் முழங்கும் அரசியல் திருவிழாவாகவும் பெருவிழாவாகவும் கொண்டாடப்படவுள்ளது.
தமிழக மக்களின் மனங்களைத் தீர்க்கமாக வெல்லும் நோக்கில் அமையவுள்ள மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் ஏற்கெனவே நடந்துவரும் நிலையில், அதற்கான களப்பணிகளும் தொடங்கப்பட உள்ளன என்பதையும் உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.
இந்த மாநாட்டில் இருந்து வலிமையான அரசியல் பெரும்பாதையை அமைப்போம்! இந்நிலையில், நமது முதல் மாநில மாநாட்டை எல்லா வகையிலும் வெற்றிகரமாக நடத்துவதற்காக, தமிழ்நாட்டு மண்ணைச் சேர்ந்த மகனாக, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் ஆதரவையும் ஆசிகளையும் உரிமையுடன் வேண்டுகிறேன். விரைவில் சந்திப்போம்!! வாகை சூடுவோம் என விஜய் தெரிவித்துள்ளார்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.