தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் குற்றவாளி யார் என்பது தெளிவாக கூறவில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் பேசியதாவது :- தமிழகத்தில் இந்தி திணிக்கப்படவில்லை ; தமிழகத்தில் அனைத்து பாடப்பிரிவுகளும் பயிற்றுமொழி தமிழ் என தமிழக அரசு அறிவித்தால் வரவேற்கிறோம். ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் எந்தவித புது தகவலும் இல்லை.
அப்போதைய சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மீது பழிசுமத்துவது தவறானது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான ஆணையத்தின் அறிக்கையில் ஆசையை தூண்டும் விதமாகவே உள்ளதே தவிர தெளிவாக இல்லை. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் போது கல்லெறிந்தவர்கள் எல்லோரும் சமூக விரோதிகள் தான்.
பொது சொத்துகளுக்கு சேதாரம் விளைவிப்பவர்கள் எல்லோரும் எங்கள் அகராதியில் சமூக விரோதிகள் தான். துப்பாக்கிச்சூடு நடத்தியது தவறு என்று சொல்லவில்லை ; துப்பாக்கிச்சூடு நடந்த விதம் தவறானது. சுட்டவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் ; ஆனால், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது ஏற்புடையதல்ல.
அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொய் சொல்லி இருக்கிறார் என்று கூறுவது முற்றிலும் தவறானது. அருணா ஜெகதீசனின் ஆணைய அறிக்கையில் ரஜினிகாந்தின் கருத்தை பற்றி கூறியதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது, எனக் கூறினார்.
ஆப்ரேஷன் சிந்தூர் பஹல்காம் தாக்குதல் இந்தியர்களாகிய நம் அனைவரையும் உலுக்கிய சம்பவம் என்பதை நாம் மறந்திருக்க முடியாது. பயங்கரவாதிகளின் தாக்குதலால்…
ஜம்மு காஷ்மீர் பகல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் உலக நாடுகளிடையே…
மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…
தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…
ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…
This website uses cookies.