அண்ணாமலை ஒரு FRAUD.. தமிழர்களை தீவிரவாதி என கூறிய பாஜக எம்பியை ஏன் கண்டிக்கவில்லை? செல்வப்பெருந்தகை!

அண்ணாமலை ஒரு FRAUD.. தமிழர்களை தீவிரவாதி என கூறிய பாஜக எம்பியை ஏன் கண்டிக்கவில்லை? செல்வப்பெருந்தகை!

வேலூர் மாநகர் மற்றும் மத்திய மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் கலந்தாய்வு கூட்டம் இன்று வேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை பங்கேற்று பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்

காங்கிரஸ் கட்சி 57 ஆண்டு காலம் ஆட்சி இழந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தி, காமராஜர் ஆட்சி அமைப்பதற்கு மக்களோடு மக்களாக காங்கிரஸ் கட்சியின் கொள்கை கோட்பாடு காங்கிரஸ் கட்சி என்னென்ன சட்டங்கள் திட்டங்கள்கொண்டு வந்துள்ளது என்பதை மக்களிடம் சென்று சேர்க்க உள்ளோம்.

நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெயக்குமார் கொலையா தற்கொலையா என்பதை முடிவு செய்ய முடியவில்லை என ஐஜி கண்ணன் தெரிவித்துள்ளார் என செய்தியாளர்கள் கேட்டதற்கு

தற்பொழுது கிடைத்துள்ள தகவல்களைப் பார்க்கும்போது அது முழுக்க முழுக்க கொலைதான்.அவர் இறந்ததை பார்க்கும் பொழுது அதை தற்கொலை தான் என்று சொல்ல முடியாது. அறிவியல் பூர்வமான ஆதாரம் இல்லை என்பதால் ஐ.ஜி அதை கொலையா தற்கொலையா என கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக இன்னும் உடற்கூறு ஆய்வு முழுவதுமாக கிடைக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார். அவருடைய விசாரணையில் அவர் அப்படி கூறி இருக்கலாம். ஆனால் பொதுமக்கள் பார்வையில் அது கொலைதான்.

சபாநாயகர் அப்பாவுவை தேவைப்பட்டால் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என செய்தியாளர்கள் கேட்டதற்கு

தற்பொழுது புலன் விசாரணை நடந்து கொண்டிருப்பதால் அதில் நாம் தலையிட கூடாது. அப்படி ஏதாவது தகவல் தெரிவித்தால் அதை விசாரணை கேட்க குந்தகம் ஏற்படும். எங்களைப் பொறுத்தவரை அது தற்கொலை இல்லை.

ஜெயக்குமார் கொலை வழக்கில் தமிழக காவல்துறையின் விசாரணை திருப்தி இல்லை என்றால் சிபிஐ அல்லது சிபிசிஐடி விசாரணை கேட்பீர்களா என செய்தியாளர்கள் கேட்டதற்கு?

காவல்துறையில் இதுவரை 10 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது புலன் விசாரணை நடைபெறும் பொழுது அதில் நாம் தலையிடக்கூடாது. தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இன்றுடன் ஒன்பது நாட்கள் ஆகிவிட்டது ஒரு தெளிவு வரும் முழுமையான உடற்கூறு ஆய்வு வந்த பிறகு காவல்துறையினர் தெரிவிப்பார்கள். விசாரணை முடிந்த பிறகு இது தொடர்பாக பதிலளிக்கிறேன்.

மேலும் படிக்க: ஏன்டா படுபாவி.. நீ ஜெயிலுக்கு போயும் திருந்தலயா? ஆபாச பேச்சு பேசிய திமுக பேச்சாளர்.. ராதிகா ஆவேசம்!

இந்தியா முழுவதும் ஒரு சதவீதம் கூட காங்கிரஸ் கட்சி வளர்ச்சி இல்லையென பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளாரே என செய்தியாளர்கள் கேட்டதற்கு?

ஏமாற்றுகிறார்கள் தகுதி இல்லாதவர்களும் அப்படி தான் கூறுவார்கள். நாடு விடுதலை அடைந்த போது ஒரு குண்டு ஊசி கூட தயாரிக்க கூடிய அளவில் இந்தியா இல்லை. ஜவஹர்லால் நேரு வந்த பிறகு நாட்டில் மிகப்பெரிய கட்டமைப்பை ஏற்படுத்தினார். ஆனால் பாஜக கடந்த பத்து ஆண்டுகளில் என்ன செய்தது என செல்வ பெருந்தகை கேள்வி எழுப்பினார். உண்மைக்கு புறம்பாக பேசுவது தான் பாஜகவின் வேலை. தமிழர்களை தீவிரவாதிகள் என கர்நாடக எம் பி கூறியிருக்கிறாரே அதற்கு முதலில் அண்ணாமலை ஒரு கண்டன மாவது தெரிவித்தாரா?. ஆர்எஸ்எஸ் கைக்கூலி தான் அண்ணாமலை. அண்ணாமலை ஒரு பிராடு காங்கிரஸ் பற்றி பேச பாஜகவுக்கு அருகதையில்லை. தேசத்திற்காக விவாதம் நடத்த ராகுல் காந்தி ஒப்புதல் அளித்துள்ளார் மோடி ஏன் இதுவரை வாய்திறக்கவில்லை.

உடுமலையில் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு

உடுமலை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற சம்பவங்களை காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறையினர் விழிப்புடன் இருக்க வேண்டும் குறிப்பாக உளவுத்துறைகள் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்ற பகுதிகளில் கண்காணிக்க வேண்டும். இனிவரும் காலங்களில் குற்றமில்லாத தமிழ்நாடு என்பதை காவல்துறை ஊர்ஜிதப்படுத்த வேண்டும்.

கஞ்சா போதை பொருட்கள் ஆப்கானிஸில் இருந்து மத்திய அரசின் பல்வேறு காவல்துறை கட்டுப்பாட்டை மீறி தமிழகத்தில் வருகிறது. மத்திய அரசின் பல்வேறு உளவுத்துறை ,பாதுகாப்பு துறை என்ன செய்து கொண்டிருக்கிறது. இதனை அனுமதிப்பது பாஜகவை சார்ந்தவர்கள் தான் எங்களுடைய கொள்கை தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைப்பதுதான். என்று செல்வ பெருந்தகை கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

2 minutes ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

59 minutes ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

2 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

2 hours ago

பார்த்தாலே தெரியுது, படம் ஃபிளாப்னு- பிரபாஸின் புது பட டீசரால் கடுப்பான ரசிகர்கள்…

பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…

4 hours ago

அதிமுக மூத்த தலைவருடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு… செல்லூர் ராஜு சொன்ன விளக்கம்!

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…

5 hours ago

This website uses cookies.