ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வருகிற 27-ந்தேதியன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில், காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிறுத்தப்பட்டுள்ளார்.
இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு முழு ஆதரவு அளிப்பதாக நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அறிவித்தார். மேலும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து ஈரோடு கிழக்கு தொகுதியில் கமல்ஹாசன் இன்று(ஞாயிற்றுக்கிழமை) பிரசாரம் செய்ய உள்ளார்.
கருங்கல்பாளையம் காந்தி சிலை, சூரம்பட்டி நால்ரோடு, சம்பத் நகர், வீரப்பன்சத்திரம் மற்றும் அக்ரஹாரம் ஆகிய இடங்களில் தொண்டர்களுடன் சென்று, கமல்ஹாசன் வாக்கு சேகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து இன்றும் நாளையும் பிரசாரம் மேற்கொள்கிறார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.