ஆளுநர் ஆர்என் ரவி முடிவுக்கு அண்ணாமலை எதிர்ப்பு? இலங்கை செல்லும் முன் பரபரப்பு கருத்து!!

ஆளுநர் ஆர்என் ரவி முடிவுக்கு அண்ணாமலை எதிர்ப்பு? இலங்கை செல்லும் முன் பரபரப்பு கருத்து!!

சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை செல்ல சென்னை விமான நிலையம் வந்த அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். சங்கரய்யாவுடன் வேறு யாருக்கேனும் டாக்டர் பட்டம் வழங்க பரிந்துரைத்து பட்டியல் அனுப்பப்பட்டத என்ற விவரம் தனக்குத் தெரியாது என ஆளுநர் மாளிகையை கோர்த்துவிட்டுள்ளார்.

இதனிடையே தமிழ்நாட்டில் இன்னும் சாதிய வன்கொடுமைகள் நிகழ்வது தமக்கு அதிர்ச்சியளிப்பதாகவும் சாதிய வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.

சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஜூலை மாதம் அறிக்கையொன்றின் வாயிலாக தெரிவித்திருந்தார்.

அதன்படி, சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு தீர்மானம் நிறைவேற்றி அதற்கு அனுமதி வழங்க கோரி ஆளுநருக்கு அனுப்பியும் வைத்துள்ளது. ஆனால் ஆளுநர் ரவி அதற்கு இன்னும் ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநரின் இந்த முடிவை பாஜகவே ரசிக்கவில்லை என்பதை தான் அண்ணாமலை சூசகமாக தனது பேட்டியில் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். சுதந்திரப் போராட்ட வீரரும், முதுபெரும் அரசியல் தலைவருமான சங்கரய்யா நூற்றாண்டுகளை கடந்து வாழக்கூடிய வரலாறாக திகழ்பவர்.

சங்கரய்யாவை ஆளுநர் அவமதிப்பு செய்துவிட்டதாக விமர்சனக்கணைகள் வீசப்படும் நிலையில், ஆளுநர் முடிவுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்பதை போல் அண்ணாமலையின் பேட்டி அமைந்துள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.