சென்னை : திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடுவதாக அறிவித்திருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சியை மாநில தலைவர் அண்ணாமலை தலைமையிலான பாஜகவினர் கடுமையாக விமர்சித்தும், எதிர்த்தும் வருகின்றனர். திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, பொங்கல் பரிசு தொகுப்பு ஊழல் மற்றும் தமிழக மின்வாரியத்தில் முறைகேடாக கோபாலபுரத்திற்கு நெருக்கமானவர்களுக்கு டெண்டர் வழங்கப்படுவதாக பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, முதலமைச்சர் துபாய் பயணத்தை விமர்சித்த அண்ணாமலை, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்குதில் ஆவின் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்காமல் தனியார் துறைக்கு டெண்டர் வழங்கப்பட்டதில் ஊழல் நடந்ததாக திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை ஆளுநர் ஆர்என் ரவியிடம் கொடுத்தார்.
அதன்பின்னரும், அடுத்தடுத்து திமுக ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுக்களை அண்ணாமலையும், பாஜகவினரும் சுமத்தி வருகின்றனர். இதனிடையே, அண்ணாமலையின் ரபேல் வாட்ச்சுக்கான பில்லை கேட்டு திமுகவினரும் பதில் கேள்விகளையும், விமர்சனங்களையும் முன்வைத்தனர்.
இதற்கு அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ஏப்., 14ம் தேதி திமுக அமைச்சர்களின் சொத்துப்பட்டியல் வெளியிடுவதாகவும், அதோடு சேர்த்து வாட்ச்க்கான பில்லை வெளியிடுவதாகவும் கூறியிருந்தார். தற்போது நடைபெற்று வரும் ஆட்சி மட்டுமில்லாமல் கடந்த 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களையும் வெளியிட இருப்பதாக அண்ணாமலை கூறினார்.
இதையடுத்து, நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், ஏப்.,14ம் தேதி ஊழல் திருவிழா இருப்பதாகவும், அதன்பிறகு தமிழகத்தில் அரசியல் மாற்றம் நிகழும் எனவும் அண்ணாமலை கூறி வந்தார்.
இந்த நிலையில், அண்ணாமலை தற்போது வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதலமைச்சர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், அவரது மகனும், அமைச்சருமான உதயநிதி, திமுக எம்பி கனிமொழி, அழகிரி உள்ளிட்டவர்களின் படங்களை பதிவிட்டு நாளை காலை 10.15 மணிக்கு திமுக ஃபைல்ஸ் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். இதனை பாஜகவினர் தற்போது டிரெண்டாக்கி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.