நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலைத் தொடர்ந்து மேயர், துணை மேயர் மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தலைவர், துணை தலைவரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் தமிழகம் முழுவதும் இன்று நடந்து வருகிறது.
இதன் ஒருபகுதியாக, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் விராலிமலை தொகுதியில் உள்ள அன்னவாசல் பேரூராட்சியை அதிமுக கைப்பற்றுவதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளது. அன்னவாசல் பேரூராட்சியில் அதிமுக 8 இடங்களிலும், திமுக 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக சார்பில் பொன்னம்மாளும், திமுக சார்பில் மதினா பேகமும் போட்டியிடுகிறார்கள்.
எனவே, திமுக வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு அதிமுக கவுன்சிலர்களுக்கு மிரட்டல் வருவதாக புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அதிமுக கவுன்சிலர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. போலீஸ் பாதுகாப்புடனே வந்து கடந்த 2ம் தேதி அவர்கள் பதவியேற்றுவிட்டுச் சென்றனர்.
இந்த நிலையில், இன்று காலை 6.30 மணிக்கே அதிமுக கவுன்சிலர்கள் பேரூராட்சி வளாகத்திற்குள் வந்து விட்டனர். சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இருந்தும் தற்போது பேரூராட்சி முன்பாக திமுக – அதிமுகவினர் திரண்டதால் பதற்றம் நீடித்தது.
திமுகவினர் போலீஸாரின் தடுப்புகளை தள்ளிக் கொண்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தள்ளுமுள்ளு போலீஸாருக்கும் திமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பேரூராட்சி அலுவலகத்தில் திமுகவினர் கல்வீசி தாக்குதலும் நடத்தினர். பதிலுக்கு போலீசாரும் தடியடி நடத்தி வருகின்றனர். இதனால் அந்த இடமே ஒரே போராட்டக்களமாக காட்சியளிக்கிறது.
பிரஜீன் சன் மியூசிக்கில் தொகுப்பாளராக தனது கெரியரை தொடங்கியவர் பிரஜின். அதன் பின் இவர் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருந்தாலும்…
ஐஸ்வர்யா ரகுபதி தமிழில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ஐஸ்வர்யா ரகுபதி. இவர் தொகுப்பாளினி மட்டுமல்லாது நடிகையும்…
பாகிஸ்தானுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்துள்ளது. இதற்கு உலகமே இந்தியாவை பாராட்டி…
விஜய்க்கு ஒன்னும் தெரியாது தவெக தலைவராக பரிணமித்திருக்கும் விஜய் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளவுள்ளார். தனது…
சிவகாசியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் 71வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்த அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…
கிரிக்கெட்டின் தல கிரிக்கெட் ரசிகர்களால் தல என அழைக்கப்படுபவர் தோனி. இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக திகழ்ந்தவர்…
This website uses cookies.