வெளியாகும் புதிய அறிவிப்புகள்? அமளியை கிளப்ப அதிமுக திட்டம்? இன்று கூடும் சட்டசபை!!

வெளியாகும் புதிய அறிவிப்புகள்? அமளியை கிளப்ப அதிமுக திட்டம்? இன்று கூடும் சட்டசபை!!

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் முதல் ஏப்ரல் வரை சுமார் ஒரு மாத காலத்திற்கு மேல் நடைபெற்றது. கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவை கூட்டம் முடிவடைந்த போது தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டால் மீண்டும் 6 மாதங்களில் கூட்டப்பட வேண்டும். அதன் அடிப்படையில் அக்டோபர் 9-ம் தேதி(இன்று) சட்டப்பேரவை கூடுவதாக தெரிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் கூடுகிறது. இந்த சூழ்நிலையில் தமிழக அரசியில் கடந்த 6 மாத காலத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. எனவே இன்று தொடங்கவுள்ள சட்டப்பேரவை கூட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் தொடர் கொலை, கொள்ளை நடப்பதாகவும் சட்டம் ஒழுங்கு மோசமடைந்திருப்பதாகவும் அதிமுக, பாஜக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. மேலும் காவிரி விவகாரத்தில் உரிய முறையில் தமிழகத்திற்கு தண்ணீர் பெற்றுத் தராத காரணத்தால் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நடைபெறவுள்ள சட்டப்பேரவை கூட்டத்தில் அதிமுக, பாஜக பிரச்சனை எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை உயர்நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. எனவே சட்டப்பேரவை எதிர்கட்சி துணை தலைவர் பதவிக்கான இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்க வேண்டும் என அதிமுக சார்பாக வலியுறுத்தப்பட்டது. ஆனால் சட்டப்பேரவை இருக்கை ஒதுக்கீட்டில் சபாநாயகர் இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லையென கூறப்படுகிறது.

எனவே வழக்கம் போல் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ்க்கு அருகருகே இருக்கையானது ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் கூட்டணி கட்சியாக இருந்த அதிமுக- பாஜக பிரிந்துள்ள நிலையில், இன்றைய கூட்டத்தில் இரண்டு கட்சிகளும் ஒன்றினைந்து செயல்படுமா.? அல்லது அரசுக்கு எதிராக தனித்தனியாக பிரச்சனை எழுப்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.