இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி ஆய்வு நிறுவனத்தின் (சிஎஸ்ஐஆர்) இயக்குநர் ஜெனரலாக தமிழகத்தை சேர்ந்த கலைச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவிக்கு வரும் முதல் பெண் என்ற பெருமை இவருக்கு கிடைத்துள்ளது.
தற்போது இவர் , சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநராக 2019ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார்.
கலைச்செல்வி 125 ஆராய்ச்சி கட்டுரைகள், 6 கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை பெற்றுள்ளார். லித்தியம் அயன் பேட்டரி குறித்த ஆராய்ச்சியிலும் ஈடுபட்டுள்ளார்.
தற்போது, நடைமுறையில் இருக்கும் சோடியம் – அயன் /லித்தியம் -சல்பர் பேட்டரிகள் மற்றும் சூப்பர் கெபாசிடர்களை உருவாக்கும் முயற்சியிலும் உள்ளார்.
தற்போது அவர், 38 ஆய்வகங்களையும், 4,600 விஞ்ஞானிகளையும், 8 ஆயிரம் தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்டுள்ள சிஐஎஸ்ஆர் அமைப்பை வழிநடத்த போகிறார். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் பிறந்தவரான கலைச்செல்வி, தமிழ்வழியில் பள்ளிப்படிப்பை முடித்தவர்.
இந்தியாவின் உயர் அறிவியல் ஆய்வு நிறுவனமான சிஎஸ்ஐஆர்.,ன் முதல் பெண் தலைமை இயக்குநர் என்ற சிறப்பைத் தமிழகத்தைச் சேர்ந்த நல்லதம்பி கலைச்செல்வி அடைந்திருக்கிறார். வாழ்த்துகள்! தமிழ்வழிக்கல்வி அறிவியலைக் கற்றுணரத் தடையாகாது என்பதற்குக் கலைச்செல்வியின் இந்தச் சாதனையே சிறந்த சான்று!
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.