கோபத்தின் உச்சியில் நிதிஷ்குமார்… போன் போட்டு சமாதானப்படுத்திய ராகுல் காந்தி.. INDI கூட்டணியில் புகைச்சல்!!!
4-வது இண்டியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஏகப்பட்ட சலசலப்புகள் வெடித்தன. இந்தியா கூட்டணியை உருவாக்கிய நிதிஷ்குமார் தமக்கு முக்கியத்துவம் கிடைக்கவில்லை. தம்மை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவில்லை. தம்மை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கவில்லை என்கிற கோபத்தில் இருந்தார்.
இதே கோபத்துடன் இந்தி மொழி பேச்சை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க சொன்ன தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுகவின் நாடாளுமன்ற குழுத் தலைவர் டிஆர் பாலு உள்ளிட்டோர் மீது சீறிய நிதிஷ்குமார் பாதியிலேயே கூட்டத்தல் இருந்து வெளியேறினார்.
இதேபோல பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவும் இந்தியா கூட்டணியில் அதிருப்தியில் இருந்ததால் டெல்லி கூட்டத்தில் பாதியிலேயே வெளியேறினார். நிதிஷ்குமாரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தாமல் மல்லிகார்ஜூன கார்கேவை பிரதமர் வேட்பாளராக மமதாவும் அரவிந்த் கெஜ்ரிவாலும் பரிந்துரைத்ததால் லாலு கோபமடைந்தார் எனவும் கூறப்பட்டது. இன்னொரு பக்கம், நிதிஷ்குமாருக்கும் லாலுவுக்கும் இடையே மோதல் உள்ளது எனவும் கூறப்பட்டது.
ஆனால் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய லாலு பிரசாத் யாதவ், நிதிஷ்குமார் யார் மீதும் அதிருப்தியில் இல்லை. ஊடகங்கள்தான் அப்படி எல்லாம் எழுதுகின்றன. எனக்கும் நிதிஷ்குமார் மீது கோபமோ அதிருப்தியோ இல்லை. இந்தியா கூட்டணி ஒற்றுமையுடன் லோக்சபா தேர்தலை எதிர்கொள்ளும் என்றார்.
இந்த நிலையில் நிதிஷ்குமாருடன் ராகுல் காந்தி தொலைபேசியில் ஆலோசனை நடத்தியதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியா கூட்டணியில் எந்தெந்த விவகாரங்களில் நிதிஷ்குமாருக்கு அதிருப்தி உள்ளது என்பதை தெரிந்து கொள்வதற்காக ராகுல் காந்தி ஆலோசனை நடத்தியதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கும் நிலையில் ராகுலின் இந்த முயற்சி பலன் தருமா? என்பது இனிவரும் நாட்களில் தெரியும்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.