பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்த நாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகியற்றை கருத்தில் கொண்டு திமுக சார்பாக ஒவ்வொரு ஆண்டும் முப்பெரும் விழா செப்டம்பர் மாதம் நடைபெறும்.
அந்த வகையில் இந்தாண்டும் மிகப்பெரிய அளிவில் முப்பெரும் விழா நடைபெறவுள்ளது.குறிப்பாக தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்து 3 ஆண்டுகளை தாண்டி வெற்றிகரமாக சென்றுகொண்டுள்ளது.
இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் பாஜகவை வீழ்த்து 40க்கு 40 தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றியது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் திமுக சார்பாக பல கூட்டங்கள் பல மாவட்டங்களில் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் திமுக சார்பாக முப்பெரும் விழா சென்னையில் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் நாள் சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் தி.மு.க. பவள விழா ஆண்டு கழக முப்பெரும் விழாவினையொட்டி ஆண்டுதோறும் வழங்கப்படுகின்ற விருதுகளுக்கான பட்டியல் வெளியிடப்படுகிறது.
அந்த வகையில் பெரியார் விருது திருமதி.பாப்பம்மாள் அவர்களுக்கும், அண்ணா விருது அறந்தாங்கி மிசா இராமநாதன் அவர்களுக்கும், கலைஞர் விருது எஸ். ஜெகத்ரட்சகன் அவர்களுக்கும், பாவேந்தர் விருது கவிஞர் தமிழ்தாசன் அவர்களுக்கும், பேராசிரியர் விருது வி.பி. இராஜன் அவர்களுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.