பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்த நாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகியற்றை கருத்தில் கொண்டு திமுக சார்பாக ஒவ்வொரு ஆண்டும் முப்பெரும் விழா செப்டம்பர் மாதம் நடைபெறும்.
அந்த வகையில் இந்தாண்டும் மிகப்பெரிய அளிவில் முப்பெரும் விழா நடைபெறவுள்ளது.குறிப்பாக தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்து 3 ஆண்டுகளை தாண்டி வெற்றிகரமாக சென்றுகொண்டுள்ளது.
இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் பாஜகவை வீழ்த்து 40க்கு 40 தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றியது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் திமுக சார்பாக பல கூட்டங்கள் பல மாவட்டங்களில் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் திமுக சார்பாக முப்பெரும் விழா சென்னையில் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் நாள் சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் தி.மு.க. பவள விழா ஆண்டு கழக முப்பெரும் விழாவினையொட்டி ஆண்டுதோறும் வழங்கப்படுகின்ற விருதுகளுக்கான பட்டியல் வெளியிடப்படுகிறது.
அந்த வகையில் பெரியார் விருது திருமதி.பாப்பம்மாள் அவர்களுக்கும், அண்ணா விருது அறந்தாங்கி மிசா இராமநாதன் அவர்களுக்கும், கலைஞர் விருது எஸ். ஜெகத்ரட்சகன் அவர்களுக்கும், பாவேந்தர் விருது கவிஞர் தமிழ்தாசன் அவர்களுக்கும், பேராசிரியர் விருது வி.பி. இராஜன் அவர்களுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.