இந்துக்கள் குறித்து ராகுல் பேசுவதற்கு முன் திமுகவினர் பேச்சை நியாபகம் வைத்து பேசவும் : நாராயணன் திருப்பதி தாக்கு!

கிருஷ்ணகிரி மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் மற்றும் கட்சி வளர்ச்சி குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில் பங்கேற்க வந்த அக்கட்சியின் மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி கூறியதாவது, ராகுல் லோக்சபாவில் பேசுகையில், ராமரை அயோத்தி என்ற நகரில் அடைத்து பேசுகிறார். நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ்., மட்டும் ஹிந்து மதம் அல்ல எனவும், ஹிந்து மதத்தினர் எல்லோரும் வன்முறையாளர்கள் எனவும் பேசியுள்ளார். தான் பேசியது தவறு என தெரிந்தவுடன், ஹிந்து என்பவர்கள் எப்படி இருக்க வேண்டும் என எல்லாம் தெரிந்தவர் போல் பேசுகிறார்.

அமைதி, சமத்துவம் என அனைவரையும் அரவணைப்பது தான் ஹிந்து மதம் என பேசும் ராகுல், அதற்கு முன் அவர்களின் தி.மு.க., கூட்டணி கட்சியினர்களான பாலு, ராசா, உதயநிதி ஆகியோர் ஹிந்து மதம் குறித்த பேச்சுகளை கேட்க வேண்டும். தமிழக அமைச்சர் உதயநிதி ஹிந்துமதம் அதாவது சனாதன தர்மத்தை அழிப்பேன் என பேசுகிறார்.

அவர்கள் பேசியதை அறியாமல் ராகுல் லோக்சபாவில் ஹிந்து, இஸ்லாம் என மதம் குறித்து பேசுவது அழகல்ல. நாட்டில் வெறுப்பு அதிகரித்துள்ளது. சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடக்கிறது என்றெல்லாம் பேசும் ராகுலுக்கு கடந்த, 2004 முதல், 2014 வரை காங்., ஆட்சியில் அதிக குண்டுவெடிப்புகள், கலவரங்கள் நடந்ததை மறுக்க முடியுமா.

கடந்த, 10 ஆண்டு, பா.ஜ.. ஆட்சியில் தான் அமைதி நிலவியது. பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் முன்னேற்றத்திற்கு பாடுபட்டது பா.ஜ., அரசு மட்டுமே.
தி.மு.க., எம்.பி., ராசா பேசுகையில், மத்திய அரசை மைனாரிட்டி அரசு என பேசுகிறார். கடந்த காலத்தில் மெஜாரிட்டி இல்லாமல் தி.மு.க., ஆட்சி நடந்தபோது அவர்களை மைனாரிட்டி அரசு என மற்ற கட்சிகள் விமர்சித்ததை மறந்துவிட்டாரா.

தன் மீது தலித் முத்திரை குத்தப்பட்டுள்ளது என்கிறார். அவர் கிருஷ்ணகிரியில் கூட நின்றிருக்கலாம். ஆனால் நீலகிரியில் நின்றது ஏன். கண்ணியம், பண்பாடு, ஒழுக்கம் குறித்து பேச தி.மு.க.,வுக்கு அருகதை இல்லை. கள்ளச்சாராயத்தை தடுக்க தெருவுக்கு தெரு போலீசை போட முடியுமா என மூத்த அமைச்சர் துரைமுருகன் பேசுகிறார்.

அதை தடுக்க தெருவுக்கு தெரு டாஸ்மாக்கை திறக்க உள்ளார்களா என தெரியவில்லை. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குறித்து பேச, 4 பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.