கிருஷ்ணகிரி மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் மற்றும் கட்சி வளர்ச்சி குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் பங்கேற்க வந்த அக்கட்சியின் மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி கூறியதாவது, ராகுல் லோக்சபாவில் பேசுகையில், ராமரை அயோத்தி என்ற நகரில் அடைத்து பேசுகிறார். நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ்., மட்டும் ஹிந்து மதம் அல்ல எனவும், ஹிந்து மதத்தினர் எல்லோரும் வன்முறையாளர்கள் எனவும் பேசியுள்ளார். தான் பேசியது தவறு என தெரிந்தவுடன், ஹிந்து என்பவர்கள் எப்படி இருக்க வேண்டும் என எல்லாம் தெரிந்தவர் போல் பேசுகிறார்.
அமைதி, சமத்துவம் என அனைவரையும் அரவணைப்பது தான் ஹிந்து மதம் என பேசும் ராகுல், அதற்கு முன் அவர்களின் தி.மு.க., கூட்டணி கட்சியினர்களான பாலு, ராசா, உதயநிதி ஆகியோர் ஹிந்து மதம் குறித்த பேச்சுகளை கேட்க வேண்டும். தமிழக அமைச்சர் உதயநிதி ஹிந்துமதம் அதாவது சனாதன தர்மத்தை அழிப்பேன் என பேசுகிறார்.
அவர்கள் பேசியதை அறியாமல் ராகுல் லோக்சபாவில் ஹிந்து, இஸ்லாம் என மதம் குறித்து பேசுவது அழகல்ல. நாட்டில் வெறுப்பு அதிகரித்துள்ளது. சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடக்கிறது என்றெல்லாம் பேசும் ராகுலுக்கு கடந்த, 2004 முதல், 2014 வரை காங்., ஆட்சியில் அதிக குண்டுவெடிப்புகள், கலவரங்கள் நடந்ததை மறுக்க முடியுமா.
கடந்த, 10 ஆண்டு, பா.ஜ.. ஆட்சியில் தான் அமைதி நிலவியது. பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் முன்னேற்றத்திற்கு பாடுபட்டது பா.ஜ., அரசு மட்டுமே.
தி.மு.க., எம்.பி., ராசா பேசுகையில், மத்திய அரசை மைனாரிட்டி அரசு என பேசுகிறார். கடந்த காலத்தில் மெஜாரிட்டி இல்லாமல் தி.மு.க., ஆட்சி நடந்தபோது அவர்களை மைனாரிட்டி அரசு என மற்ற கட்சிகள் விமர்சித்ததை மறந்துவிட்டாரா.
தன் மீது தலித் முத்திரை குத்தப்பட்டுள்ளது என்கிறார். அவர் கிருஷ்ணகிரியில் கூட நின்றிருக்கலாம். ஆனால் நீலகிரியில் நின்றது ஏன். கண்ணியம், பண்பாடு, ஒழுக்கம் குறித்து பேச தி.மு.க.,வுக்கு அருகதை இல்லை. கள்ளச்சாராயத்தை தடுக்க தெருவுக்கு தெரு போலீசை போட முடியுமா என மூத்த அமைச்சர் துரைமுருகன் பேசுகிறார்.
அதை தடுக்க தெருவுக்கு தெரு டாஸ்மாக்கை திறக்க உள்ளார்களா என தெரியவில்லை. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குறித்து பேச, 4 பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது.
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
வேலூர்மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியில் பேருந்து நிறுத்தம்அருகில் அமுதம் ஓட்டல் கடை உள்ளது. இதன் உரிமையாளர் சீனிவாசன் அவருடைய…
This website uses cookies.