நண்பனுக்கு துரோகம்.. இரட்டைக் கொலையில் திடீர் திருப்பம் : கொலையாளியை நெருங்கும் போலீஸ்!!

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஜெகன்னாதபுரம் சத்திரம் பகுதியில் குட்டுலு (25) என்ற பீகாரை சேர்ந்த இளைஞர் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வந்துள்ளார்.

அருகில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார். இவருடன் அதே நிறுவனத்தில் பணியாற்றும் அஸாமை சேர்ந்த துவர்க்கா பார் என்பவர் தமது மனைவி, இரண்டு குழந்தைகளுடன் அருகில் உள்ள இருளிப்பட்டு பகுதியில் வசித்து வந்தார்.

நேற்றிரவு பணி முடித்து வீட்டிற்கு வந்த துவர்க்கா பார் தமது மனைவி, குழந்தைகள் காணாமல் போனது கண்டு அக்கம்பக்கத்தில் விசாரித்துள்ளார்.

அப்போது அருகில் உள்ள குட்டுலு என்பவரது வீட்டிற்கு சென்றதாக அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர். இதனையடுத்து தமது மனைவி, குழந்தைகளை தேடிக்கொண்டு வந்து பார்த்த போது குட்டுலு வீடு பூட்டியிருந்தது.

ஜன்னல் வழியே பார்த்த போது இரண்டு குழந்தைகள் வாயில் கட்டப்பட்டும், அவரது மனைவி சுமிதா பார் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சோழவரம் போலீசார் மயங்கிய நிலையில் இருந்த சுமிதா பாரை (21) மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலைமையில் சிக்ச்சை அளிக்கப்பட்ட நிலையில், குழந்தைகளான சரத் மற்றும் ரீமாவின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில், துவர்ககா பார் மனைவியுடன் குட்டுலு திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்தது தெரியவந்தது. இந்த நிலையில் சுமிதா பார் குழந்தைகளை அழைத்து குட்டுலு வீட்டிற்கு சென்ற போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அதில் இரண்டு குழந்தைகளையும் தலையில் தாக்கி வாயில் டேப் வைத்து கட்டிப்போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார். மேலும் கள்ளக்காதலியான சுமிதா பாரை அரிவாளால் தாக்கிய கழுத்தில் வெட்டி விட்டு வீட்டை பூட்டிக் கொண்டு தப்பியோடியது தெரியவந்தது.

இந்த கொலை சம்பந்தமாக 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசரணையில் ஈடுபட்டுள்ளனர். விசரணையில் குற்றவாளி ரயிலில் பீகாருக்கு தப்பி சென்றிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

7 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

7 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

7 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

8 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

8 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

9 hours ago

This website uses cookies.