பாஜகவினரை பொறுக்கி எனக் கூறிய நாஞ்சில் சம்பத்திற்கு எதிராக பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரபல தனியார் தொலைக்காட்சி மக்கள் சபை எனும் விவாத நிகழ்ச்சியை வாராவாரம் ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில், இந்த வாரத்திற்கான நிகழ்ச்சி ஈரோடு மாவட்டம் வேளாளர் கல்லூரியில் நடைபெற்றது. அப்போது, பேசிய நாஞ்சில் சம்பத், பாரதிய ஜனதா கட்சியினரை பொறுக்கி என்று குறிப்பிட்டு பேசினார்.
இதனால், அரங்கில் பார்வையாளர்களாக இருந்த பாஜகவினர் கோபமடைந்தனர். ஒருகட்டத்தில், அனைவரும் மொத்தமாக எழுந்து மேடையை நோக்கிச் சென்று தங்களது எதிர்ப்பினை பதிவு செய்தனர். மேலும், நாஞ்சில் சம்பத் பேசியது தவறு என்றும், அதை அவர் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால், நிகழ்ச்சி நடந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், தான் பேசியது தவறு என உணர்ந்திய நாஞ்சில் சம்பத், தான் பேசிய வார்த்தையை திரும்பப் பெறுவதாகக் கூறினார். இதனால், நிகழ்ச்சியில் மீண்டும் அமைதி திரும்பியது. இந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.