சென்னை : ஆவின் பொருட்கள் மற்றும் டாஸ்மாக் விலை உயர்வை கண்டித்து பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மற்றும் மறைமுகத் தேர்தல் நடந்து முடிந்து அனைத்து உறுப்பினர்களும் பதவியேற்று விட்டனர். இதில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியுள்ளது.
இதனிடையே, ஆவின் பொருட்களாக நெய், தயிர் உள்ளிட்டவையின் விலையை அண்மையில் உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டது. இதற்க எதிர்கட்சியினர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுக்களின் விலையும் இன்று முதல் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. பாட்டில் ஒன்றுக்கு 10 ரூபாய் 80 ரூபாய் வரையில் உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஆவின் பொருட்கள் மற்றும் டாஸ்மாக் விலை உயர்வுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு, ஆவினில் உள்ள நெய் முதல் தயிர் வரையிலான பொருட்களின் விலை உயர்த்தப்பட்டது. தற்போது, டாஸ்மாக் கடைகளில் குவாட்டர் பாட்டில் முதல் பீர் வரையிலான மதுவகைகளின் விலை இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது.
இறுதியாக, திமுக அறிவித்தது போன்று தமிழகத்தில் விடியல் ஆட்சி வந்துவிட்டது, எனக் குறிப்பிட்டுள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.