மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குறித்து இழிவாக பேசிய திமுக எம்பி டிஆர் பாலு மீது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மத்திய அமைச்சராக இருப்பதற்கே தகுதியில்லாதவர் என்று திமுக எம்பி டிஆர் பாலு பேசியது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. பட்டியலின அமைச்சர் ஒருவரை இப்படி பேசலாமா..? என்று அவருக்கு எதிராக கண்டனங்களும், விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.
டிஆர் பாலுவின் இந்தப் பேச்சு ஒட்டுமொத்த பட்டியலின மக்களை இழிவுபடுத்தும் விதமாக இருப்பதாகவும், அமைச்சர் எல்.முருகன் குறித்து இழிவாக பேசிய திமுக எம்பி டிஆர் பாலு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியிருந்தார
இந்தநிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் டிஆர் பாலுவின் பேச்சை கண்டித்து தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பட்டியலின அணி மாநில பொதுச் செயலாளர் நாகராஜ் தலைமையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனில் அமைந்துள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதாவது, சாதிய உள்நோக்கத்தோடும், மிக மோசமாக சாதிய வன்மத்தோடும், சாதிய அதிகார அடக்குமுறை ஆணவத்தோடும், மத்திய இணை அமைச்சர் எல் முருகனை இழிவுபடுத்தும் விதமாக பேசியதற்கு டிஆர் பாலு மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
வரிசையாக லைக் போட்ட விராட் கோலி பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் அவ்னீட் கவுர். இவர் பல ஹிந்தி…
பிரபல இயக்குநர் சொன்ன கதைப்படி படம் முழுவதும் பாவாடை கட்டிக்கிட்டு வரவேண்டும் என்பதால் படத்தில் இருந்து விலகியுள்ளார் சூப்பர் ஸ்டார்.…
தேர்தலை நோக்கி விஜய் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை நோக்கி விஜய் நடைபோட்டுக்கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் இரண்டு…
விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி பெரிய திரையில் வாய்ப்பு பெற்றவர் நடிகர் யோகி பாபு. டைமிங் காமெடி மூலம்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாஜக வடக்கு மண்டல் தலைவராக பாலகிருஷ்ணன் என்பவரது பதவி ஏற்பு விழா உசிலம்பட்டியில் உள்ள தனியார்…
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
This website uses cookies.