ராமநாதபுரம் ; கைது செய்யப்பட்ட முறையே தவறு சுவர் ஏறி குதித்து வீட்டுக்குள் வந்து கைது செய்ததாக பாஜக மாநில பொதுச் செயலாளர் சூர்யா தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் அரண்மனை முன்பு பாஜகவின் 9-ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு, சிறையில் இருந்து வெளியில் வந்த பாஜக மாநில பொதுச்செயலாளர் சூர்யா கலந்து கொண்டார்.
கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :- கைது செய்த முறையே தவறு. ஏழு வருடத்திற்கு குறைவான தண்டனை இருக்கக்கூடிய எந்த கைதியையும் கைது செய்ய வேண்டுமானால், முதலில் சம்மன் அனுப்ப வேண்டும். வாரண்ட் காட்ட வேண்டும். தகவல் அளிக்க வேண்டும்.
இதை எதையும் பின்பற்றாமல் சுவர் ஏறி குதித்து வந்து பொய் சொல்லி கீழே வரவழைத்து கைது செய்தனர். எதற்காக கைது செய்கிறோம் என்று தகவலை கூட சொல்லாமல் கைது செய்தனர். இந்திய சட்டத்திற்கு எதிராகவும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலுக்கு எதிராகவும் இருந்ததாலே கைது குறித்து கேள்வி எழுப்பினோம்.
500 காவல்துறையை மதுரையிலிருந்து சென்னைக்கு அனுப்பி என்னை கூட்டி வருவதற்கான காரணம் என்ன..? ஒரு சம்மன் அனுப்பி இருந்தால் நானே காவல் நிலையம் வந்திருப்பேன். ஆகவே, இவர்கள் கைது செய்த விதம் தவறானது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதலுக்கு எதிரானது.
கைது என்று சொன்னவுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி போல நெஞ்சு வலி என நாடகம் ஆடவில்லை. சிறுநீர் கழிக்கவில்லை. மருத்துவமனை சென்ற பிறகு ஐந்து வகை சட்னியுடன் இட்லி கேட்கவில்லை. எங்களை கைது செய்யும் பொழுது அடம் பிடிக்கவில்லை. நெஞ்சு வலி என கூறவில்லை. நெஞ்சுரத்துடன் சென்றோம்.
அதிகாரிகளை தள்ளி விடுகின்றனர், அரசாங்க அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை என கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.