திருச்சி மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகனும், பாரதிய ஜனதா கட்சியின் ஓபிசி அணி மாநில பொதுச் செயலருமான சூர்யா சிவா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் பாஜகவினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை ஈடுபட்டனர்.
ஆனால் அவர்கள் கலைய மறுத்ததால் 5 பெண்கள் உட்பட 60க்கும் மேற்பட்டோர் காவல் துறையினர் கைது செய்தனர். அப்போது காவல்துறையினருக்கும் பிஜேபி கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அப்போது சிலர் திடீரென காவல் நிலையத்திற்கு எதிரே உள்ள சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் அனைவரையும் கைது செய்தனர்.
சூர்யா சிவா மீது கூட்டமாக பொருட்களை எடுத்துச் செல்லுதல் கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை கண்டோன்மென்ட் காவல் நிலையத்திலிருந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொரோனோ பரிசோதனைக்காக அழைத்து சென்றனர்.
பின்னர் மருத்துவமனையில் இருந்து திருச்சி JM2 நீதிமன்றத்தில் நீதிபதி பாலாஜி முன்பு ஆஜர்படுத்தி பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.