அண்ணா குறித்து அண்ணாமலை தவறான நோக்கத்தோடு பேசியதாக வெளியே பேசக்கூடாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு பாஜக துணை தலைவர் கருநாகராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராமசாமி படையாட்சியாரின் 106வது பிறந்த நாளையொட்டி, தமிழக பாஜக சார்பில் கருநாகராஜன், வி.பி.துரைசாமி ஆகியோர் சென்னை கிண்டியில் உள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து செய்தியாளர்களை பாஜக மாநில துணைத் தலைவர் கருநாகராஜன் சந்தித்தார். அப்போது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேரறிஞர் அண்ணா குறித்து பேசியது தொடர்பான கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது :- சில சரித்திர நிகழ்வுகளை அண்ணாமலை பேசியுள்ளார். அண்ணாவை குறை சொல்ல வேண்டும்; அவரின் புகழுக்கு கலங்கம் விளைவிக்க வேண்டும் என்று மாநில தலைவர் மட்டும் அல்ல.. எங்கள் கட்சியில் எந்த தலைவர்களும் நினைத்துக்கூட பார்த்தது இல்லை.
இது தவறான பிரச்சாரமாக ஆகிவிடக் கூடாது. இது ஜெயக்குமாருக்கு நன்கு புரியும். அண்ணாமலை தவறான நோக்கத்தோடு பேசியதாக வெளியில் பேசக்கூடாது என்பதை வேண்டுகோளாக வைக்கிறேன், எனத் தெரிவித்தார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.