எனக்கு சம்மன் அனுப்ப தைரியம் இருக்கா..? ஆதாரங்களை வெளியிட்டால் பதவியே போயிடும் ; எச்சரிக்கும் அண்ணாமலை..!!

கோவை கார் வெடிப்பு சம்பவத்திற்கு முன்பாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தும், தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததைக் கேட்டு தனக்கு இரத்தம் கொதித்தாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வைஷ்ணவா மகளிர் கல்லூரியில் ‘modi @20 : dreams meet delivery’ எனும் பிரதமர் மோடி குறித்த நூலின் அறிமுக விழாவில் மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்வுடன் இணைந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது :- கடலூரில் நான் பேசியது குறித்து திமுக ஐடி விங் மூலம் வழக்கம்போல சர்ச்சை கிளப்பப்பட்டுள்ளது. ஒரு கட்சியை சார்ந்த 2 ஊடக நண்பர்கள் காரிய கர்த்தா உறுப்பினருடன் நான் பேச முடியாதபடி நடந்து கொண்டனர். நான் பத்திரையாளர்களை சந்திக்கவில்லை என்று ஏற்கனவே அங்கு கூறியிருந்தேன்.

திமுக ஐடி விங்கில் இருக்கும் வேலை இல்லாதவர்கள் ஒரு பகுதியை மட்டும் பரப்பி வருகின்றனர். கோவை பந்த் தொடர்பாக நான் அழைப்பு விடுக்கவில்லை என்பதை நீதிமன்றம் நேற்று ஏற்றுக் கொண்டுள்ளது. பாஜக தலைமை பந்த் நடத்த வேண்டும் என யாரையும் நிர்பந்திக்க மாட்டோம் , கோவை மக்களின் உணர்வை பொறுத்து அங்கு பந்த் நடைபெறும். கோவை மாவட்ட பாஜகவினர் மக்களின் ஆதரவை பெற்று அங்கு பந்த நடத்துவது என்பது அவர்களது விருப்பம்.

என்ஐஏ என்பது professional agency, எல்லை கடந்த தீவிரவாத வழக்குகளை விசாரிக்கும் அமைப்பு. நேற்று ஆளுநர் கோவையில் பேசும்போது குற்றவாளிகளை கைது செய்ததற்காக அடிமட்ட காவல்துறையின் செயல்பாட்டை பாராட்டினார். ஆனால் முடிவெடுக்கும் இடத்தில் இருப்பவர்கள்தான் தாமதம் செய்துள்ளனர்.

கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு குறித்து 18ம் தேதியே மத்திய உள்துறை மாநில அரசுக்கு specifice ஆக alert கொடுத்தனர் , ஆனால் 21 ம் தேதி மாலைதான் மாநில உளவுத்துறை மத்திய உளவு துறை அறிக்கையை எடுத்து , சில விசயங்களை அதனுடன் இணைத்து அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது. 4 நாட்கள் தாமதம் செய்துள்ளனர்.

டிஜிபியும் , கோவை மாநகர காவல் கண்காணிப்பாளரும் மத்திய உளவுத்துறையிடமிருந்து அறிக்கை வரவில்லை என்று கூறுகின்றனர். ஆனால் மாநில உளவுத்துறைமூலம் 21 ம் தேதி அனுப்பப்பட்ட கடிதம் என்னிடம் இருக்கிறது . official secret act எனும் சட்டம் காரணமாக அதை இப்போது என்னால் வெளியிட முடியவில்லை. மாநில அரசு சம்மன் அனுப்பினால் வெளியிட தயாராக இருக்கிறேன்.

ஊடகங்களில் தொடர்ந்து செய்தி வெளியானதால் மாநில அரசு வேறு வழியின்றி கோவை கார் வெடிப்பு குறித்து nia விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளது. திமுக மேடையில் பாஜகவில் உள்ள 4 தலைவர்கள் குறித்து பேசியது தவறு. நட்டா இதுதொடர்பாக என்னை தொடர்பு கொண்டு பேசினார்.

குஷ்பு , கௌதமி , காயத்ரி ரகுராம் , நமீதாவிடம் நான் தொடர்பு கொண்டு பேசினேன். திமுகவினருக்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என்று கூறினேன். கட்சி அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று கூறினேன். கொச்சைப்படுத்துவதை தாண்டியும் சில வார்த்தைகளை அந்த மேடையில் பேசியுள்ளனர். கனிமொழி அப்பேச்சை கண்டித்ததை நான் வரவேற்கிறேன்.

யாரோ செய்த தவறுக்கு அவர் மன்னிப்பு கேட்பது மட்டும் போதாது. எனவே பாஜக மகளிரணி சார்பில் திமுகவை கண்டித்து போராட்டம் நடைபெறும் . 400க்கும் மேற்பட்ட இமெயில் தேசிய மகளிர் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஊடகங்களைப் போலவே பெண்கள் அரசியலுக்கு வருவதும் மனதளவில் கடினமானது. சாராய வியாபாரியான செந்தில் பாலாஜி உட்பட யாராக இருந்தாலும் தவறு செய்தால் தண்டனை அனுபவித்து தான் ஆக வேண்டும். காவல்துறையை உள்ளடக்கிய உள்துறை, மத்திய அரசுக்கு செல்ல வேண்டும் என்று எப்போதும் நாங்கள் சொல்ல மாட்டோம். ஏனென்றால் மாநில அரசின் அதிகாரம் குறைந்துவிடும்.

மாநிலப் பட்டியலில் பிரதமர் எந்த இடையூறும் செய்யவில்லை. சில அமைச்சர்கள் கூறியதைப்போன்று Nia என்னை விசாரித்தால் என்னிடம் இருக்கும் ஆதாரங்களை சமர்ப்பிப்பேன். எந்த அதிகாரி எனக்கு அவற்றை அனுப்பியது என்பதையும் கூறுவேன். காரில் வெடித்தது. சிலிண்டர்தான் என்றே தொடர்ந்து கூறியதன் காரணம் என்ன..? அதன் மூலம் தெரியவரும். எனவே, பல உயரதிகாரிகளின் பதவிகள் பறிபோகக் கூடிய ஆபத்து இருக்கிறது. என்னிடம் இருக்கும் ஆதாரங்களை வெளியிட்டால் பூதம் வெடிக்க ஆரம்பிக்கும்.

தைரியமிருந்தால் மாநில அரசு எனக்கு சம்மன் அனுப்பட்டும். நான் ஆதாரங்களை சமர்ப்பிக்கிறேன். ஆனால், பின்னர் பொதுவெளியிலும் அவற்றை வெளியிடுவேன். 18ம் தேதி மத்திய உளவுத்துறை அனுப்பிய தகவல் பின்னர் எனக்கு கிடைத்தது. அதை பார்த்தவுடன் என் ரத்தம் கொதித்தது. மற்ற அரசியல்வாதிகளிடம் விளையாடுவது போல் என்னிடம் விளையாட கூடாது.

முதலமைச்சருக்கு தவறான தகவல் கொடுக்கப்படுகிறது. இசுலாமியர்களுக்கு எதிராக நான் எப்போதும் பேசியதில்லை. நான் பேசிவதை கேட்டு இந்துக்கள் வெகுண்டெழுந்து தங்களது சொத்துகளை சேதப்படுத்திக்கொண்டு இசுலாமியர்கள் மீது பழி சுமத்துவார்கள் என்று முதலமைச்சரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். 1998 குண்டுவெடிப்புக்கு ஒருவாரம் முன்பும் இதுபோன்ற உளவு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

முதலமைச்சர் தனது மச்சான், மாப்பிளை, பையனுக்கு வேண்டியவர்களை உடன் வைத்து கொள்ளாமல் நல்லவர்களை மட்டும் உடன் வைத்துக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறன். முரசொலி ஒரு toilet paper , அது பத்திரிகை அல்ல. கடலூர் சம்பவத்தில் நான் எந்த தவறும் செய்யாதபோது அதற்காக நான் எப்படி வருத்தம் தெரிவிக்க முடியும்.

முதலமைச்சர் கோவை செல்ல வேண்டும் என்று வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார். என்றாலும் முதலமைச்சர் தற்போது முதுகுவலியுடன் உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறார். அவர் வேகமாக குணமடைய வேண்டும். எனவே தற்போது அவரை கோவை செல்ல வேண்டும் என வலியுறுத்துவது நாகரிகமாக இருக்காது.

பிரதமர் நவம்பர் 11ம் தேதி மதியத்திற்கு மேல் திண்டுக்கல்லில் உள்ள மகாத்மா காந்தி கிராம் பல்கலைக்கு பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிக்கு வருகிறார். அன்றைய தேதியில் கட்சி நிகழ்ச்சி ஏதும் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை, என்றார்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?

நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…

10 hours ago

வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!

பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…

12 hours ago

Bye Bye Stalin என மக்கள் சொல்லும் போது சட்டை கிழித்து தவழாமல் இருந்தால் சரி : இபிஎஸ் விமர்சனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…

12 hours ago

சிம்புவே ரெடி; ஆனா ஷூட்டிங் ஆரம்பிக்கல! இயக்குனர் செய்த காரியத்தால் தள்ளிப்போகும் STR 49?

STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…

13 hours ago

அஜித் விருது வாங்கிய நேரம்.. ஹீரா குறித்து அவதூறு : பின்னணியில் அரசியலா?

நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…

13 hours ago

அவருக்கு நான் அம்மாவா? கடுப்பான கஸ்தூரி : எந்த நடிகர்னு தெரியுமா?!

தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…

14 hours ago

This website uses cookies.