சென்னையில் மாமூல் தர மறுத்த ஓட்டல் மேலாளரை ரத்தம் வரும் அளவிற்கு தாக்கிய ரவுடி கும்பல் மீது இன்னும் நடவடிக்கை எடுக்காதது ஏன்..? என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை – திருமங்கலம் பகுதியில் செயல்பட்டு வரும் உணவகம் ஒன்றில் புகுந்த ரவுடி கும்பல் மாமூல் கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், ஓட்டல் மேலாளர் மாமூல் தர மறுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால், கடுப்பான அந்த கும்பல், மேலாளரின் அறைக்குள் புகுந்து அவரை ரத்தம் வரும் அளவிற்கு தாக்கியுள்ளனர்.
வடமாநில ஊழியரான அவர் வலி தாங்க முடியாமல் கதறி அழுதுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, போதைப் பொருட்கள் மற்றும் மதுவினால் பெட்ரோல் குண்டுவீச்சு, இரவு, பகலில் கொலை சம்பவங்கள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை மற்றும் குண்டர் சட்டம் போடுவது தான் ஊழல் திமுக அரசின் சாதனையாகும்.
தற்போது, திருமங்கலம் பகுதியில் ஓட்டல் மேலாளரை மாமூல் கேட்டு ரவுடி கும்பல் தாக்கியுள்ளது. இது தொடர்பாக புகார் அளித்தும் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. மக்களை பாதுகாப்பில்லாத வாழ்க்கை முறையில் வாழவைப்பதுதான் திமுக அரசின் எண்ணமாக இருக்கிறது, எனக் குறிப்பிட்டுள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.