10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மற்றும் பெறாத மாணவர்களுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்தையும், அறிவுரையையும் வழங்கியுள்ளார்.
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 6ம் தேதி வெளியான நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.55% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்தாண்டு 0.16% கூடுதலான தேர்ச்சி விகிதம் ஆகும். வழக்கம் போல, மாணவர்களை விட மாணவிகள் 5.95 சதவீதம் அதிக தேர்ச்சி அடைந்துள்ளனர்.
1,364 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. அரசுப்பள்ளிகள் 87.90 சதவீதமும், அரசு உதவிப் பெறும் பள்ளிகள் 91.77 சதவீதமும், தனியார் சுயநிதிப் பள்ளிகள் 97.43 சதவீதமும் தேர்ச்சியடைந்துள்ளன. தேர்வெழுதிய சிறைவாசிகளில் 260 பேரில் தேர்ச்சி பெற்றவர்கள் 228 பேர் ஆகும். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரியலூர் மாவட்டத்தில் 97.31% பேர் தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் தான் குறைந்தபட்சமாக 82.07% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேலும் படிக்க: சவுக்கு சங்கரின் வீடு, அலுவலகத்தில் திடீர் ரெய்டு.. சென்னை அழைத்து வரப்படும் சூழலில் போலீசார் சோதனை…!!!
இந்த நிலையில், பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மற்றும் பெறாத மாணவர்களுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்தையும், அறிவுரையையும் வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள X தளப்பதிவில் கூறியிருப்பதாவது:- பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு சிறந்த எதிர்காலத்தை நோக்கி நீங்கள் ஒரு அடி முன்வைத்துள்ளீர்கள். தொடர்ந்து முன்னேறி உங்கள் பெற்றோரையும், ஆசிரியர்களையும், நாட்டையும் பெருமைப்படுத்த எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு சிலர், தேர்ச்சி பெறத் தவறியிருந்தாலும், உங்கள் அடுத்த முயற்சியிலும், வாழ்க்கையிலும் சிறப்பாக செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் பிரகாசமான எதிர்காலத்திற்கு, நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.