அரசு வேலையை திமுகவினருக்கே வழங்கப்பட்டு வருவதாக திமுக நிர்வாகி பேசும் வீடியோவை பகிர்ந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே திமுகவிற்கும், பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டு வருகிறது. திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிட தயாராக இருப்பதாக அண்ணாமலை கூறி வருகிறார். அதேவேளையில், அண்ணாமலையை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், திமுக கூட்டத்தில் அக்கட்சியின் நிர்வாகி நிர்வாகி ஒருவர் பேசும் வீடியோவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பகிர்ந்ததுடன், அவரது பேச்சுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில், திமுக நிர்வாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்கப்பட்டு வருவதாக திமுக தென்காசி மாவட்ட செயலாளர் சிவ பத்மநாபன் பேசுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
இதனை பகிர்ந்த அண்ணாமலை, பொதுமக்களை ஏமாற்றுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது இந்த திறனற்ற திமுக அரசு. திமுக தென்காசி மாவட்ட செயலாளர் சிவ பத்மநாபன் அரசு வேலை வாய்ப்புகளை தன் சொந்த கட்சிக்காரர்களுக்கே ஒதுக்குவதாக தெரிவிக்கும் இந்த காணொளி அதிர்ச்சி அளிக்கிறது. இதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன், எனக் கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.