பிரதமர் மோடியின் பேச்சை விமர்சித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு பதிலடி கொடுத்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.
பிரபல ஆங்கில ஊடகத்துக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, சில அரசியல் கட்சிகள் பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டத்தை வழங்குகின்றன. இதனால் மெட்ரோல் ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை சரிந்து வருகிறது. அதோட இலவச பேருந்து பயண திட்டத்தால் போக்குவரத்து அதிகரித்து, சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது என தெரிவித்திருந்தார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிய நிலையில் தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்தார். இந்த நிலையில், அமைச்சருக்கு பதிலடி கொடுத்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அவர் விடுத்துள்ள X தளப்பதிவில் கூறியிருப்பதாவது :- தி.மு.க அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சலுகைகளை விலைகொடுத்து பெற்றாக வேண்டியுள்ளது. உலகில் எந்த மூலையிலும் இதுபோன்று நடந்ததில்லை. பயனாளிகளை ஒவ்வொரு அமைச்சரும் ஓசி என இழிவுபடுத்துவது தமிழகத்தில் திமுக ஆட்சியில் தான்.
மேலும் படிக்க: திமுகவின் இலவச பேருந்து திட்டம் குறித்து பிரதமர் மோடி விமர்சனம்.. பதிலடி கொடுத்த அமைச்சர் பிடிஆர்!
அரசின் சேமிப்பில் இருந்து மக்களுக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுவது என்பது சிறந்த நகைச்சுவையாகும். பால், மின்சாரக் கட்டணம் போன்ற இதர அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. ஒருநபரின் வலது பாக்கெட்டில் திருடி, இடது பாக்கெட்டுக்கு நலத்திட்டம் என்ற பெயரில் கொடுப்பதில் திமுகவுக்கு கை வந்த கலை.
2) திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து சுமார் 6000 பேருந்துகளின் சேவைகள் நிறுத்தப்பட்டு விட்டது. இது பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
3) கடந்த 3 ஆண்டுகளாக மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யும் திட்டம் அறிவிப்பாகவே உள்ளது.
திமுக அரசின் மாபெரும் ஊழலை அம்பலப்படுத்தியதற்காக நிதி இலாகாவை இழந்த அமைச்சர், தனக்கு சம்பந்தமே இல்லாத துறை குறித்து பேசி வருகிறார். அப்படியெனில், அரசுப் பள்ளிகளுக்கான ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கான உபகரணங்கள் வாங்குவதற்கான டெண்டரை, கேரள அரசுக்கு சொந்தமான தொழில்நுட்ப நிறுவனத்திற்கு வழங்கியது ஏன்..?
நமது மத்திய அரசின் சமக்ரா சிக்ஷா திட்டத்தின் ஒரு பகுதியைக் கொண்ட இந்த ₹1000 கோடி டெண்டரில் ELCOTக்கு வாய்ப்பு அளிக்கப்படாதது ஏன்..? என்று தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் விளக்கமளிப்பாரா?, எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா…
நடிகர் அஜித் பத்மபூஷன் விருதுடன் நேற்று சென்னை திரும்பிய நிலையில் இன்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய தமிழக அரசு, அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவையில்…
நயன்தாரா தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். கட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக மார்க்கெட் இறங்காமல் ஏறுமுகமாகவே இருக்கிறார்.…
வாய்ஸ் ஓவர் இயக்குனர் கௌதம் மேனன் என்றாலே அவரது திரைப்படங்களில் இடம்பெற்ற காதல் காட்சிகள் நினைவிற்கு வரும். அதனுடன் சேர்ந்து…
This website uses cookies.