திமுக ஆட்சிக்கு வந்ததும், 1000 தடுப்பணைகள் கட்டுவோம் என கூறிவிட்டு இதுவரை ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கவில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகம் முழுவதும் அணை உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு போனதால், குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் இறங்கி, குடிநீர் கேட்டு போராட்டம் நடத்த துவங்கி விட்டனர்.
மேலும் படிக்க: நெருக்கடியில் சிக்கிய EPS, அண்ணாமலை… தேர்தல் களத்தில் திடீர் ட்விஸ்ட்..!
இந்த நிலையில், ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்பது முதலமைச்சருக்கும், அமைச்சர்களுக்கும் தெரியாதா..? என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது :- நிரந்தர தீர்வை நோக்கிய ஒரு தொலைநோக்கு திட்டத்தையாவது இதுவரை திமுக அறிவித்துள்ளதா..?. மழைநீர் சேகரிக்க நீர்நிலைகளை தூர்வார, சீரமைக்க கவனம் செலுத்தாததே நீர் பற்றாக்குறை ஏற்பட காரணம்.
புதிய நீர்நிலை உருவாக்குதல், தடுப்பணைகள் கட்டினால் அடுத்து வரும் மழைக்காலத்தில் நீர் சேமிக்க முடியும். திமுக ஆட்சிக்கு வந்ததும், 1000 தடுப்பணைகள் கட்டுவோம் என கூறிவிட்டு இதுவரை ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கவில்லை. காவிரி நீரில் தமிழகத்தின் உரிமையை காங்கிரசிடம் முழுமையாக அடகு வைத்துவிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின், எனக் குறிப்பிட்டுள்ளார்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.