இனி ஒரு உயிர் போனாலும்…. எந்தக் காலத்திலும் மன்னிப்பே கிடையாது ; திமுகவை எச்சரிக்கும் அண்ணாமலை…!!

சென்னை ; இனியும் அரசின் அலட்சியத்தால் ஒரு உயிர் பறிபோனால், திமுகவுக்கு எந்தக் காலத்திலும் மன்னிப்பு கிடையாது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த 5 ஆம்‌ தேதி, மழை வெள்ளம்‌ சூழ்ந்திருந்ததால்‌, பிரசவ அவசரத்திற்கு ஆம்புலன்ஸோ, மற்ற வாகனங்களோ கிடைக்காமல்‌, வடசென்னை கன்னிகாபுரம்‌ பகுதியைச்‌ சேர்ந்த மசூத்‌ – செளமியா தம்பதியினரின்‌ குழுந்தை, மருத்துவமனைக்கு மீன்பாடி வண்டியில்‌ கொண்டு செல்லும்‌ வழியிலேயே இறந்த நிலையில்‌ பிறந்திருக்கிறது.

இந்நிலையில்‌, குழந்தையின்‌ தாய்‌ உயிரையாவது காப்பாற்ற, புளியந்தோப்பு அரசு மருத்துவனைக்குக்‌ கொண்டு சென்ற போது, அரசு மருத்துவமனையின்‌ கதவுகளைத்‌ திறக்க மறுத்திருக்கிறார்கள்‌ என்று கூறப்படுகிறது. பின்னர்‌ தனியார்‌
மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்பட்டு, தொப்புள்கொடி அறுக்கப்பட்ட, பின்னர்‌ கீழ்ப்பாக்கம்‌ மருத்துவமனைக்குக்‌ கொண்டு சென்றிருக்கிறார்கள்‌.

குறித்த நேரத்தில்‌ மருத்துவ உதவி கிடைக்காமல்‌, பச்சிளம்‌ குழந்தையின்‌ உயிர்‌ பறிபோனது மட்டுமல்லாமல்‌, தாயின்‌ உயிருக்கும்‌ ஆபத்து ஏற்படும்‌ விதமாக அரசு மருத்துவமனையில்‌ நடந்து கொண்டிருக்கிறார்கள்‌. மேலும்‌, கீழ்ப்பாக்கம்‌ அரசு மருத்துவமனையில்‌, குழந்தையின்‌ உடலைக்‌ கொடுக்க, பணம்‌ கேட்டதாகவும்‌ குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. உச்சகட்ட அவலமாக, குழந்தையின்‌ உடலை, துணியில்‌ சுற்றிக்‌ கொடுக்காமல்‌, சாதாரண அட்டைப்பெட்டியில்‌ வைத்துக்‌ கொடுத்திருக்கிறார்கள்‌. தமிழக மருத்துவத்‌ துறை வரலாற்றில்‌ இந்த சம்பவம்‌ மிகப்பெரும்‌ கருப்புப்‌ புள்ளி.

நமது நாட்டைப்‌ பொறுத்தவரை மருத்துவத்‌ துறையின்‌ தலைநகரமாக விளங்கிய தமிழகம்‌, கடந்த சில ஆண்டுகளாகவே, சொல்லொணா அவல நிலைக்குச்‌ சன்று கொண்டிருப்பதைப்‌ பார்த்துக்‌ கொண்டிருக்கிறோம்‌. கடந்த 2022 ஆண்டு நவம்பரில்‌, பொரியார்‌ நகர்‌ அரசு மருத்துவமனையில்‌ தவறான சிகிச்சை காரணமாக, கால்பந்து வீராங்கனை பிரியா மரணமடைந்தார்‌. கடந்த மார்ச்‌ மாதம்‌ வரை, 21 மாதங்களில்‌ 247 குழந்தைகள்‌ புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில்‌ மரணமடைந்துள்ள
அதிர்ச்சி செய்தி கிடைத்தது.

கடந்த ஜுலை மாதம்‌, தஞ்சாவூர்‌ மாவட்டத்தில்‌, அங்கன்வாடியில்‌ தடுப்பூசி போடப்பட்ட பத்து மாத பெண்‌ குழுந்தை மயக்கமடைந்து, உடனடி சிகிச்சை அளிக்காமல்‌ தஞ்சாவூர்‌ அரசு மருத்துவமனைக்குக்‌ கொண்டு செல்லப்பட்டு, உயிரிழந்த சம்பவம்‌ வரும்‌ அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த ஆகஸ்ட்‌ மாதம்‌, எழும்பூர்‌ அரசு குழந்தைகள்‌ மருத்துவமனையில்‌ ஐந்து ஆண்டுகளாக தவறான சிகிச்சை காரணமாக, காவலர்‌ ஒருவரின்‌ 10 வயது பெண்‌ குழந்தையின்‌ வலது கால்‌ பாதிப்படைந்ததால்‌, அவர்‌ தன்னையும்,‌ குழுந்தையையும்‌ கருணைக்‌ கொலை செய்யும்படி வேதனை தெரிவித்திருந்தார்‌. அதே ஆகஸ்ட்‌ மாதம்‌, சென்னை ராஜீவ்‌ காந்தி மருத்துவமனையில்‌ தவறான சிசிச்சை காரணமாக, ஒன்றரை வயது ஆண்‌ குழுந்தையின்‌ வலது கை அழுகி அகற்றப்பட்டதோடு, சிகிச்சை பலனின்றி, அந்தக்‌ குழுந்தை பலியான துயரமும்‌ நடந்தது.

கடந்த செப்டம்பர்‌ மாதம்‌, சென்னை ராஜீவ்‌ காந்தி மருத்துவமனையில்‌, ஆஞ்சியோ சிகிச்சை பெற வந்த பெண்ணின்‌ கையை, தவறான சிகிச்சை காரணமாக அகற்றியுள்ளனர்‌. அரசு மருத்துவமனைகளில்‌ தொடரும்‌ இது போன்ற தவறான சிகிச்சைகள்‌ காரணமாக உயிரிழப்புகள் ஆகியிருக்கின்றன. எளிய மக்களின்‌ ஒரே நம்பிக்கையான அரசு மருத்துவமனைகள்‌, இது போன்று உயிர்களைப்‌ பறிக்கும்‌ இடங்களாக மாறி வருவதைக்‌ குறித்து பொதுமக்களும்‌, தமிழக பாஜகவும்‌ பல முறை கேள்வி எழுப்பியும்‌, திமுக அரசு எந்த நடவடிக்கைகளும்‌ எடுக்காமல்‌, மடைமாற்றுவதையே வேலையாகக் கொண்டிருக்கிறது. ஐரோப்பாவுக்கு இணையான மருத்துவக்‌ கட்டமைப்பு என்று முதலமைச்சர்‌ ஒருபுறம்‌ கூறுவதும்‌, அரசு மருத்துவமனைகளில்‌ ஏற்படும்‌ தொடர்‌ மரணங்களுக்கு தங்கள்‌ மீது எந்தத்‌ தவறும் இல்லை என்று, பிறரைக்‌ கைகாட்டி அமைச்சர்‌ தப்பிக்க முயற்சிப்பதும்‌ எந்தப் பலனையும் தரப்போவதில்லை என்பதை திமுக அரசு உணர வேண்டும்‌.

அரசு மருத்துவமனைகளில்‌, மருத்துவர்களுக்கும்‌, மருத்துவமனை பணியாளர்களுக்கும்‌ பற்றாக்குறை உள்ளதா, அதன்‌ காரணமாக குறித்த நேரத்தில்‌ சிகிச்சை பெற முடியாமல்‌ பொதுமக்கள்‌ அவதிக்குள்ளாகின்றனரா என்பதைக்‌ கண்டறிந்து, உடனடியாக அதற்கான நடவடிக்கைகள்‌ எடுக்க வேண்டியது அரசின்‌ கடமை.

ஏழை எளிய மக்களின்‌ அடைக்கலமான அரசு மருத்துவமனைகளில்‌, தரமான உட்கட்டமைப்பு வசதிகள்‌ உள்ளனவா என்பதை தமிழக அரசு இலவசமாக வழங்கப்பட வேண்டிய மருத்துவ வசதிகளுக்கு, கட்டணம்‌ வசூலிப்பவர்கள்‌ மீது கடும்‌ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்‌. தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட இடைவெளிகளில்‌ அரசு மருத்துவமனைகளில்‌ ஆய்வுகள்‌ நடத்தி, அடிப்படை வசதிகளைத்‌ தொடர்ந்து மேம்படுத்த வேண்டும்‌.

இன்னும்‌ எத்தனை ஏழை எளிய உயிர்களைப்‌ பலியாடக்‌ காத்திருக்கிறது திமுக அரசு? அடிப்படை வசதிகள்‌ எவற்றையும்‌ மேம்படுத்தாமல்‌, விளம்பரத்துக்காகவும்‌, இறப்புகளை மூடி மறைப்பதற்காகவும்‌, இழப்பீடு மட்டும்‌ கொடுத்துவிட்டு, பிரச்சினைகளை தள்ளிப்‌ போடுவதால்‌ என்ன சாதிக்க நினைக்கிறது? இனியும்‌ அரசின்‌ அலட்சியத்தால்‌ ஒரு உயிர்‌ பறிபோனால்‌, திமுகவுக்கு எந்தக்‌ காலத்திலும்‌ மன்னிப்பு கிடையாது, என தெரிவித்துள்ளார்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

விஜய் பாஜகவோட C team? தவெக குறித்து ஓபனாக போட்டுடைத்த பிரபலம்!

தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…

12 hours ago

ஒரு செங்கலைக் கூட இன்னும் எடுத்து வைக்கவில்லை.. திமுக பாணியை கையில் எடுத்த அண்ணாமலை!

மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…

12 hours ago

சந்தானம் போட்ட கண்டிஷனால் கடுப்பான சிம்பு? STR 49 படம் கைமாறியதற்கு காரணம் இதுதானா?

STR 49  “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…

13 hours ago

தனிமனிதனை வேட்டையாடுவதால் வரலாறை மாற்ற முடியாது : கீழடி அமர்நாத் மாற்றம்.. சு.வெங்கடேசன் கண்டனம்!

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…

13 hours ago

கொரேனா பரவல்.. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கா? உண்மை இதுதான்!

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…

13 hours ago

தக் லைஃப் தோல்வியால் சிம்புவுக்கு வந்த பிரச்சினை? கடைசில இப்படி ஆகிடுச்சே!

சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…

14 hours ago

This website uses cookies.