ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தமிழகத்தில் நீட் தேர்வை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் என் மண் என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டு வரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வில்லுக்குறி சந்திப்பில் தொண்டர்களிடம் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:- தமிழ்நாடு கலாச்சாரத்தில் ஆணிவேரே குடும்பம் தான். அந்த குடும்ப ஆட்சியே தற்போது திமுக தான். 1954ல் தமிழகத்திற்காகவும், குமரிக்காகவும் போராடிய போராளிகளின் பெயர்கள் இன்று வரலாற்று புத்தகத்தில் இடம்பெறவில்லை.
இதுவரை ஆறு முறை ஆட்சி செய்த போது 5 மருத்துவ கல்லூரிகளை தான் திமுக ஆட்சி கொடுத்துள்ளது. ஆனால் பிரதமர் மோடி அதிகளவு மருத்துவ கல்லூரிகளை தந்துள்ளார். 30 ஆயிரம் கோடி ஊழல் என குடும்ப ஆட்சிக்கு எதிராக பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஏன் டம்மி அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 7 சதவிகிதமாக இருந்த கல்வி அறிவை, 18 ஆயிரம் பள்ளிகளை திறந்து 35 சதவிகிதமாக மாற்றிய கர்ம வீரர் காமராஜருக்கு மரியாதை இல்லை. இதுபோன்று தான் நீட் தேர்வும், தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் நீட் இருக்கும் திமுகவின் பித்தலாட்டத்தால் நீட்டை தடுத்து நிறுத்த முடியாது, எனக் கூறினார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.