சென்னை : தமிழகத்தில் 2 நாட்களில் 2 விசாரணை கைதிகள் உயிரிழந்த சம்பவத்தால், காவல்துறையின் மீது மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்த இந்த ஓராண்டு காலத்தில் சிறை மரணங்கள் தடுக்க முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது. சென்னை தலைமை செயலக குடியிருப்பு காவல்நிலையத்தில் விக்னேஷ் என்பவரும், திருவண்ணாமலை கலால் காவல்நிலையத்தில் தங்கமணி என்பவரும் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சிறையிலேயே உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து, லாக் அப் மரணங்களை தடுக்க டிஜிபி சைலேந்திர பாபு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார். அதாவது, விசாரணைக்கு அழைத்து வரப்படுபவர்களை இரவு நேரங்களில் சிறையில் வைக்கக் கூடாது என்றும், அவர்களை அடிக்கக் கூடாது என பல்வேறு உத்தரவுகளை போட்டார். அதுமட்டுமல்லாமல், காவலர்களுக்கு சிறப்பு கவுன்சிலிங் வழங்கும் விதமாக, பயிற்சி முகாம்களும் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் அலமாதியை சேர்ந்த அப்பு (எ) ராஜசேகர் என்பவரை விசாரணைக்காக கொடுங்கையூர் போலீசார் காவல்நிலையம் அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவர் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பான பிரச்சனை அடங்குவதற்குள், நாகை மாவட்ட சிறையில் இருந்த கொத்தமங்கலத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்ற விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சுப்பிரமணியன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து 2 விசாரணை கைதிகள் உயிரிழந்த விவகாரம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், அடுத்தடுத்த லாக் அப் மரணங்களால் காவல்துறையின் மீது மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இரண்டு நாட்களில், இரண்டு லாக்கப் மரணங்கள். நேற்று ராஜசேகர், இன்று சிவசுப்பிரமணியன். காவல் நிலையத்திற்குச் சென்றால் உயிருடன் திரும்புவோமா என்ற அச்சத்தை விதைத்துள்ளது முதல் அமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை
கடந்த ஓராண்டில் ஏழு லாக்கப் மரணங்கள். காவல்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களுக்கு அமைக்கப்பட்ட ஆணையத்தின் நிலை என்ன? தமிழகத்தில் அரசு இயங்குகிறதா???, என தெரிவித்துள்ளார்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.