நீட் தேர்வுக்கு எதிராக பள்ளி மாணவர்களிடம் திமுகவினர் கையெழுத்து வாங்கும் சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் விமர்சனம் செய்துள்ளார்.
மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். இந்த நுழைவுத் தேர்வை திமுக கடுமையாக எதிர்த்து வருகிறது. குறிப்பாக, கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது, நீட் தேர்வை ரத்து செய்வோம் என்ற வாக்குறுதியை கொடுத்தே, பெரும்பாலான ஓட்டுக்களை அள்ளியது.
ஆனால், ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளாகியும் நீட் தேர்வை திமுக ரத்து செய்யவில்லை. இதனால், எதிர்கட்சிகளின் கடும் விமர்சனத்திற்கு திமுக ஆளாகியுள்ளது. குறிப்பாக, அமைச்சர் உதயநிதி தேர்தல் பிரச்சாரத்தின் போது, நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியம் தங்களிடம் இருப்பதாகக் கூறியதை அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சியினர் கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர். இது திமுகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.
தற்போது, நீட் தேர்வில் விலக்கு பெறும் நோக்கில் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்து பெறுவதற்கான கையெழுத்து இயக்கத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். அண்மையில், சென்னை விருகம்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ பிரபாகர் ராஜா, அரசு பள்ளி ஒன்றில் மாணவர்களிடம் நீட் பற்றிய பொய் பிரசாரம் செய்வது, நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்களிடம் கையெழுத்து பெற்றதாக வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பள்ளிகள் ஒன்றும் அரசியல் மேடைகள் அல்ல என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் புரிந்து கொண்டு, அவரது மகனின் முட்டாள்தனமான திட்டங்களுக்கு அனுமதியளிக்கக் கூடாது என்றும், நாளைய மருத்துவர்களான இளம் மாணவர்களின் மனதில் திமுக ஏன் தற்கொலை என்ற எண்ணத்தை விதைப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில், பள்ளி மாணவர்களை அழைத்து வந்து, நீட்டுக்கு எதிராக திமுகவினர் கையெழுத்து வாங்கும் சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வீடியோவை பகிர்ந்த அவர், கடந்த வாரம் அழையா விருந்தாளியாக பள்ளிக்கு சென்ற திமுக எம்எல்ஏ, பள்ளி மாணவர்களிடையே தற்கொலை எண்ணத்தை தூண்டினார். இன்று, திமுக நிர்வாகிகள் பள்ளி மாணவர்களை அழைத்த வந்து நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து வாங்குகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே, உங்கள் மகனின் பொய்யான வாக்குறுதிக்கு, பள்ளி மாணவர்கள் ஒன்றும் தேர்தல் கைக்கூலிகள் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நாடு…
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் மே தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு…
16 வயது சிறுவனுடன் 12 முறை உடலுறவு வைத்த டீச்சர் மீது 64 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம்…
கிளாசிக் ஜோடி கமல்ஹாசன்-ஸ்ரீதேவி ஜோடியை 80களின் காலகட்டத்தில் பலரும் கொண்டாடியது போல் ரஜினி-ஸ்ரீதேவி ஜோடியையும் பலரும் கொண்டாடினர். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால்…
மனைவியை கொலை செய்ய மது கொடுத்து கை, கால்களை கட்டி உல்லாசமாக இருந்துவிட்டு கழுத்தை நெறித்து கொன்ற ஜிம் மாஸ்டரின்…
வரிசையாக லைக் போட்ட விராட் கோலி பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் அவ்னீட் கவுர். இவர் பல ஹிந்தி…
This website uses cookies.