இன்று ஜல்லிகட்டு நடைபெறுவதற்கு பிரதமர் மோடியை காரணம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் சக்குடியில் இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது :- இன்று தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது என்றால், அதற்கு முக்கிய காரணம் பிரதமர் மோடி காரணம். பிரதமர் மோடியை மதுரை ஜல்லிக்கட்டுக்கு அழைத்து வருவது என்பது வேள்வி என்றும் அவரை அழைத்து வரும் வரை எங்களுக்கு ஓய்வு கிடையாது, எனக் கூறினார்.
பாஜகவின் அநீதிகள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதற்கு, முதல்வர் பழைய செருப்பை போட்டுக்கொண்டு அரசியல் நடத்தணும்-னு நினைக்கிறார். அந்தப் பழைய செருப்பே அவரைக் கடிக்கத் தான் போகிறது. அவர் சொல்கின்ற பொய்களுக்கு எல்லாம் எங்களுக்கு வாக்குகள் சேர்ந்து கொண்டே தான் இருக்கும், என்றார்.
மேலும், திமுக கூட்டணி குறித்த கேள்விக்கு, மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். மோடிக்கு வாக்களிக்க வேண்டும். நாங்களும் தெளிவாக இருக்கிறோம். தமிழக அரசை சுத்தப்படுத்த வேண்டும். அதற்கு 2024 ஒரு களமாக இருக்கும், என்றார்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.