சேலம் இளைஞரணி மாநாடு போடாதே என்று இயற்கை இதுவரை 4 முறை தள்ளி வைத்திருப்பதாகவும், உதயநிதி துணை முதல்வராக்க நினைக்கிறார்கள் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேப்பனஹள்ளி, தளி தொகுதிகளில் என் மண், என் மக்கள் என்கிற யாத்திரையை முடித்துக்கொண்டு மாவட்டத்தின் கடைசி மற்றும் 150வது தொகுதியாக ஒசூரில் அண்ணாமலை பாதயாத்திரை நடத்தினார். 150வது தொகுதி என்பதால் பாஜக தமிழக மேலிட பொறுப்பாளர் சிடி.ரவி பங்கேற்றார்.
ஓசூரின் முக்கிய வீதிகள் வழியாக திறந்த வாகனத்தில் ரவி, அண்ணாமலை ஆகியோர் வருகை தந்தனர். பாஜக தொண்டர்கள் மலர் தூவி வரவேற்றனர்.
பின்னர் ராம்நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது :- சேலத்தில் மாநாட்டை போடாதே என இதுவரை இயற்கை 4 முறை தள்ளிப்போட்டிருக்கிறது. இது இயற்கை கொடுக்கும் செய்தி. திமுகவை பொறுத்தவரை ஒரு நிமிடத்தில் முடிவு, இரண்டு நிமிடத்தில் அறிவிப்பு, மூன்றாவது நிமிடத்தில் தொண்டர்கள் ஏற்பார்கள். இதுதான் குடும்ப கட்சி, குடும்ப ஆட்சி.
திருச்சியில் திமுக இளைஞரணி மாநாட்டில் உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டுமென திமுகவினர் எதிர்பார்த்திருக்கிறார்கள். 2024 தேர்தலுக்கு பிறகு வயதானவர்கள் கட்சியில் எதற்கு என உதயநிதியை முதல்வராக்க ஒரு கூட்டம் சுத்திக்கொண்டிருக்கிறது, என விமர்சித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.