வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி பூஜ்ஜியம் வாங்கும் என பாஜக மூத்த தலைவர் ஹச்.ராஜா தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பாஜக மூத்த தலைவர் ஹச்.ராஜா சுவாமி தரிசனம் செய்தார். கோவிலில் மூலவர், சண்முகர், சம்ஹாரமூர்த்தி மற்றும் வள்ளி, தெய்வானை சன்னதிகளில் சிறப்பு வழிபாடு செய்து சுவாமி தரிசனம் செய்தார்.
அதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :- மத்திய பாஜக அரசை விமர்சிப்பதற்கு திமுகவிற்கு தகுதி இல்லை. திமுகவின் ஊழல் லட்சணம் 1977ம் ஆண்டே மக்களுக்கு தெரியும். ஊழலில் சிறை சென்ற செந்தில்பாலாஜியை ஏன் இலாகா இல்லாத அமைச்சராக திமுக வைத்துள்ளது..?
இந்த நாட்டிற்கு அவமான சின்னம் திமுக. திமுக அவமான சின்னத்தின் அழுக்கு உதயநிதி ஸ்டாலின். இந்து மதம் குறித்து வெறுப்புணர்வுடன் பேசிய உதயநிதி ஸ்டாலினை அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கவேண்டும். திமுக அரசு நேர்மை தவறிய அரசாக செயல்படுகிறது. திமுக அரசு தொலையும்போதுதான் மக்களுக்கு நிம்மதி ஏற்படும் என மக்கள் நம்புகின்றனர், என தெரிவித்தார்.
அப்போது அவர் பேசிச்கொண்டிருக்கும் போது திடீர் மின்தடை ஏற்பட்டபோது, திமுக அணில்களின் வேலையாக இருக்கும் என சுட்டிக்காட்டி பேசிய அவர், திமுக ஆட்சி வந்ததிலிருந்தே மின் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதாகவும், இபிஎஸ், ஓபிஸ் இருக்கும் போது யூபிஎஸ் தேவைப்படவில்லை என்றும், அவர்கள் இருவரும் சென்றபின் யூபிஎஸ் இல்லாமல் இருக்க முடியவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.
மேலும், சினிமாவில் ரஜினி அண்ணாமலை என்றால், நிஜவாழ்க்கையில் H.ராஜா தான் அண்ணாமலை என்றும், வீடு வீடாக பால் ஊற்றிதான் பட்டம் படித்ததாக தெரிவித்தார். இந்து மதத்தை அழிப்பதாக திமுக பேசியதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது என்றும், இதற்காக எதிர்வினை வரும் பாராளுமன்ற தேர்தலில் தெரியும் என்றும், காங்கிரஸ் கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் பெரிய பூஜ்ஜியம் வாங்கும், என்றார்.
மேலும், காங்கிரஸ் கட்சியை அழிப்பதற்கு அதன் தலைவர் மல்லிகார்ஜூனே கார்கே போதும் எனவும் அவர் விமர்சனம் செய்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.