சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், வரும் 28ஆம் தேதி முதல் முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை 44-வது செஸ் ஒலியம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.
இப்போட்டிக்கான தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் 28-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பர பதாகைகளில் பிரதமர் படம் இடம்பெறாதது, அரசியல் காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது என தமிழக பா.ஜ.க கட்சி வன்மையாக கண்டித்து வருகிறது.
அரசின் விளம்பர பதாகையில், பிரதமர் படம் இடம் பெறாவிட்டால், நாங்கள் தனியாக வைப்போம் என பா.ஜ.க மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி விழாவிற்காக தமிழக அரசின் விளம்பரங்களில் பிரதமர் மோடி படத்தை பா.ஜ.க, விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டு பிரிவின், மாநிலத் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி ஒட்யுள்ளார்.
இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி, இது திமுக நடத்தும் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி கிடையாது, இது சர்வதேச போட்டி.
பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் அவருடைய புகைப்படத்தை போடாமல் திமுக அரசியல் காழ்ப்புணர்ச்சியாக அவரின் போட்டோவை தவிர்க்கிறது. இதனால் நான் பிரதமர் போட்டோவை பதிவிட்டது போல, அந்தந்தை மாவட்ட பாஜக தலைவர்கள் திமுக மாடல் அரசு விளம்பரங்களில் பிரதமர் போட்டை பதிவிட வேண்டும், ஸ்டிக்கர் அரசாங்கத்துக்கு ஸ்டிக்கர் ஒட்டுங்கள் என வேண்டுகோள் வைத்தார்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.