‘ஒத்த செங்கலோடு 3 வருஷமா சுத்துனவரு அமைச்சர் உதயநிதி’… ஏன் எய்ம்ஸ்க்காக வானதி சீனிவாசன் கேள்வி..!!

ஒரு செங்கல்லை வைத்து 3 வருடமாக சுற்றி கொண்டு இருந்தவர்கள் ஏன் எய்ம்ஸ்க்கு எதுவும் செய்யவில்லை என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடு முழுவதும் ரயில் நிலையங்களை மேம்படுத்தும் திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இதன் ஒரு பகுதியாக கோவை வடகோவை ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவுமான வானதிசீனிவாசன் கலந்து கொண்டார்.

இதனைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து வானதி சீனிவாசன் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பிரதமர் உரையில் இருந்த அம்சங்களை குறிப்பிட்டு பேசிய அவர், கோவை வடக்கு ரயில் நிலைய மேம்பாடு மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்தது எனவும், அது நிறைவேற துவக்கி உள்ளது எனவும் தெரிவித்தார்.

இங்கே உட்காரும் வசதி, லிப்ட் வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் என 12 கோடி மதிப்பீட்டில் வசதிகள் செய்யப்படுகிறது எனவும், இதனால் நெருக்கடிகள் குறைக்கப்படும், நீண்ட காலமாக இருந்த கோரிக்கைகள் நிறைவேற்றபட்டு இருப்பதற்கு நன்றி எனவும் தெரிவித்தார்.

என்னென்ன அடிப்படை வசதிகள் தேவைபடுகின்றதோ அது தொடர்பாக ரயில்வே நிர்வாகத்திடம் வலியுறுத்தப்படும் எனவும், ராணிகமலாவதி ரயில் நிலையம் போல கோவை ரயில்நிலையம் மேம்படுத்தபடும் எனவும் தெரிவித்தார்.

கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகம் தொடர்பாக ஐ.எஸ்.ஓ சான்றிதழ் சர்ச்சைக்குள்ளானது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, தானும் அதை பார்த்ததாகவும், எந்த ஐஎஸ்ஓ நிறுவனம் தகுதியாக இருக்கின்றதோ, அந்த நிறுவனத்தை எனது அலுவலகத்திற்கு அனுப்புங்கள் எனவும் தெரிவித்தார்.

ரயில் நிலையங்களில் ஒவ்வொரு கட்டமாக பணிகளை செய்து கொண்டு இருக்கின்றோம் எனவும், தேர்தலுக்காக செய்யவில்லை எனவும் தெரிவித்த அவர், பா.ஜ.கவில் பிற அரசியல் கட்சியினர் இணைவதற்கு பின்னணியில் பண பேரம் நடைபெறுவதாக கூறப்படுகின்றது என்பதை மறுத்தார்.

கட்சி கொள்கைகளை பிடித்து, உன்னதமான உணர்வோடு இணைகின்றனர் எனவும், இதை பொறுக்க முடியாமல் பணபேரம் என்று சொல்கின்றனர் என வானதி சீனிவாசன் பதில் அளித்தார். மற்ற கட்சியினரை இழுக்குறோம் என்றால், அவர்கள் விருப்பம் இல்லை என்றால் வர முடியாதே என தெரிவித்த அவர், அடுத்து பா.ஜ.க ஆட்சிதான் அமைகின்றது என்பதை உணர்த்து இருக்கின்றனர் எனவும், இதில் இணைந்தால் அரசியல் லட்சியங்களை நிறைவேற முடியும் என்பதால் இணைகின்றனர் எனவும் தெரிவித்தார்.

பா.ஜ.கவில் யார் இணைகின்றார், அவர் எத்தனை அடி உயரம் என்பதெல்லாம் இன்னும் 4 மணி நேரத்தில் தெரிந்து விடும், ஊடகங்கள் இல்லாமல் யாரையும் இணைக்க மாட்டோம் என தெரிவித்த அவர், காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த விஜயதாரணிக்கு உழைப்பு, திறமை அடிப்படையில் அங்கீகாரம் கிடைக்கும் எனவும், மக்கள் பிரதிநிதியாக இருந்து மன அழுத்தம், உட்கட்சி பிரச்சினை போன்ற காரணங்கள் இங்கே வந்திருக்கலாம் எனவும் தெரிவித்தார்.

பா.ஜ.கவை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தாலும், நாளை பா.ஜ.கவில் இணைந்தால் தேசியத்திற்காக இணைத்து பணியாற்றுவோம் எனவும் தெரிவித்தார். தேர்தல் தொடர்பாக கட்சி என்ன முடிவு எடுக்கின்றதோ, அதற்கு உடன்படுவதாகவும், வானதி சீனிவாசன் போட்டியிடுகின்றாரா இல்லையா என்பதற்குள் போகவில்லை எனவும் தெரிவித்தார்.

மோடி வருகையால் பா.ஜ.கவினர் பயங்கர உற்சாகத்துடன் இருக்கின்றனர், இப்பவே கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வர துவங்கி விட்டனர் எனவும் தெரிவித்தார். பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி, பலூன் காட்டியவர்கள் இன்று வரவேற்பு தெரிவித்து கொண்டு இருக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.

மதுரை எய்ம்ஸ் குறித்த கேள்விக்கு பல முறை பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர்கள் பதில் சொல்லி இருக்கின்றோம் எனவும் தெரிவித்த அவர், ஒரு செங்கல்லை வைத்து 3 வருடமாக சுற்றி கொண்டு இருந்தவர்கள் ஏன் எய்ம்ஸ்க்கு எதுவும் செய்யவில்லை எனவும் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பினார்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

2 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

3 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

4 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

4 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

5 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

5 hours ago

This website uses cookies.