ஒன்றிய அமைச்சர் எனக் குறிப்பிட்டதால் திமுக கூட்டணி கட்சியின் எம்பி நவாஸ் கனிக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், மத்திய அமைச்சர் கலந்து கொண்ட கூட்டத்தில் சலசலப்பு நிலவியது.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே உள்ள மூக்கையூர் துறைமுகத்திற்கு மீனவர்களுடைய கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா மற்றும் மத்திய மீன்வளம் கால்நடை பராமரிப்புத்துறை இணை அமைச்சர் எல் முருகன், மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
மாலை 4 மணிக்கே விழா தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இரவு 8:30 மணி அளவில் நிகழ்ச்சிக்கு வந்த மத்திய அமைச்சர் மற்றும் மத்திய இணை அமைச்சர் ஆகியோர்களை வரவேற்று பேசிய ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி மத்திய அமைச்சரை குறிப்பிடும் பொழுது, ” ஒன்றிய அமைச்சர்” என குறிப்பிட்டார்.
இதனால் அங்கிருந்த பாஜக தொண்டர்கள் நவாஸ் கனிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி, ‘மேடையில் இருந்து கீழே இறங்கு உனது பேச்சை நிறுத்து’, எனவும் கூறி, மத்திய அமைச்சர் என சொல்லுமாறு ஒருமையில் பேசி கோசமிட்டனர். இதனை அடுத்து பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தனது பேச்சை நவாஸ் கனி பாதியில் நிறுத்திக் கொண்டார்.
மேலும், அங்கு கூடியிருந்த பாஜக தொண்டர்கள் மத்திய அமைச்சர் என கூற வேண்டுமென தொடர்ந்து கூச்சலிட்டனர். இதனை அடுத்து, சூழ்நிலையை உணர்ந்த மத்திய அமைச்சர், அவரிடமிருந்து மைக்கை வாங்கி, நான் மாலை வருவதாக இருந்த நிலையில், இரவு வரை எனக்காக காத்திருந்த மீனவ மக்களை சந்திப்பதற்கு நான் இங்கு வந்துள்ளேன், நன்றி வணக்கம் என தமிழில் பேசி பேச்சை முடித்துக் கொண்டார்.
இதனை அடுத்து பேசிய மத்திய இணை அமைச்சர் எல் முருகன் அதே கருத்தை வலியுறுத்தினார். மேலும், நவாஸ் கனி, ஒன்றிய அமைச்சர் என குறிப்பிட்டு பேசிய பேச்சுக்கு அங்கிருந்த பாஜக தொண்டர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து, நவாஸ் கனி ஒழிக என கோசமிட்டபடியே இருந்தனர்.
இதனால் விழா முடிந்த நிலையில், பரபரப்பான சூழ்நிலையை அறிந்த மத்திய அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா தனது காரிலேயே நவாஸ் கனியை ஏற்றிக்கொண்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். நீண்ட நேரம் நடைபெற வேண்டிய இந்த நிகழ்ச்சி நவாஸ் கனியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக, விழா பாதியிலேயே நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பாஜக தொண்டர்களின் இந்த எதிர்ப்பை கொஞ்சமும் எதிர்பாராத நவாஸ் கனி, மேடையில் அமைச்சருக்கு நான் பேசியதில் எந்த தவறும் இல்லை என்பது போன்று தனது விளக்கத்தை அளித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.