தமிழை ஒழித்துக்கட்ட பாஜக பிளான்? பிரதமர் போடறது வேஷம் : காங்., எம்பி அட்டாக்!!

காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்;- உலகம் முழுவதும் தமிழ்மக்களின் பெருமையை கொண்டு சேர்ப்பதற்காகப் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார் என்றும் தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் செலுத்தும் விதமாக திருவள்ளுவருக்கு மரியாதை கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் தமிழ்நாட்டிற்கு வந்த பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா பேசியிருக்கிறார்.

உலகில் உள்ள மொழிகளிலேயே தமிழ் மொழிதான் தொன்மையான மொழி என அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக தமிழ் அறிஞர்களை, ஆன்மீக ஆர்வலர்களை கொண்ட குழுவை அமைக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் அறிஞர்கள், ஆன்மீக ஆர்வலர்களை கொண்ட ஒரு குழுவை அமைத்தார்கள். அந்தக் குழுவினர், தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக கடந்த 8 ஆம் தேதி நெல்லையில் முதல் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தினார்கள்.

கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தமிழில் குடமுழுக்கு நடத்தக்கூடாதென்றும், சமஸ்கிருதத்தில்தான் நடத்தவேண்டுமென்று அடாவடியில் ஈடுபட்டு எதிர்த்தரப்பு கருத்துக் கூறியவர்களை தாக்க முற்பட்டுள்ளனர்.

கூட்டத்தில் பங்கேற்ற ஆன்மீகப் பேச்சாளர் சுகிசிவத்தை தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தி பேசியுள்ளனர். கருத்துக் கேட்புப் படிவங்களை கிழித்தெறிந்து ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளனர் பா.ஜ.க.வினர்.

பிரதமர் மோடி தமிழின் மேன்மை குறித்து பேசுவது வெறும் வெற்று வேசம். தமிழை அனைத்து துறைகளிலும் ஒழித்துக் கட்டுவதே பா.ஜ.க.வினரின் நோக்கம். சமஸ்கிருதம் மொழிக்குதான் நிதிநிலை அறிக்கையில் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் பா.ஜ.க. எவ்வாறேனும் காலூன்றி விடவேண்டும், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி விட வேண்டுமென்ற நோக்கத்தில் தமிழ் மொழியையும், அய்யன் திருவள்ளுவரையும் தூக்கி பிடிக்கிறார் பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா.

ஆனால், தமிழ்மொழி விரோதிகளான பா.ஜ.க. கூட்டத்தை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்கவும் மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள் என செல்வபெருந்தகை கூறியுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.